Showing posts with label ஐதராபாத். Show all posts
Showing posts with label ஐதராபாத். Show all posts

Friday, February 06, 2015

On Friday, February 06, 2015 by farook press in ,    
தமிழ் திரையுலகில் 1990-களில் ரம்பா முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை ரம்பா. 'உள்ளத்தை அள்ளித்தா’, சுந்தரபுருஷன், செங் கோட்டை, அருணாசலம், வி.ஐ.பி., காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித் துள்ளார்.
2010-ல் கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் டோரண்டோவில் வசிக்கிறார்.தற்போடி டிவி ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார்.
ரம்பாவுக்கு சென்னை யிலும் ஐதராபாத்திலும் வீடுகள் உள்ளன. ஐதராபாத் வீட்டில் தனது நகைகளை பீரோவில் பூட்டி வைத்து இருந்தார். அந்த நகைகள்தான் மாயமாகியுள்ளது. இந்த வீட்டில் ரம்பாவின் அண்ணன் வசிக்கிறார். அவர் வெளியே சென்று இருந்த போது யாரோ வீட்டுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். ரொக்க பணமும் திருட்டு போய் உள்ளது.
இது குறித்து ரம்பா சகோதரர் சீனிவாஸ் போலீசில் புகார் அளித்தார். தனது மனைவி குடும்பத்தினர் நகைகளை திருடி இருக்கலாம் என சந்தேகிப்பதாக புகாரில் தெரிவித்து உள்ளார். புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
எனது தங்கை ரம்பாவின் நகைகளை வீட்டில் வைத்து இருந்தேன். அவற்றை காண வில்லை. கொள்ளை போன நகைகளில் மதிப்பு ரூ.4.5 கோடி ஆகும். நகைகளை என் மனைவி பல்லவி குடும்பத் தினர் திருடி இருக்கலாம் என்று நினைக்கிறேன். பல்லவியுடனும், அவரது குடும்பத்தினருடனும் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஏற்கனவே அவர்கள் ரம்பா மீதும் என் மீதும் பொய் புகார் அளித்து இருந்தனர்.  என்னிடம் ரூ.1 கோடி கேட்டு நிர்பந்தமும் செய்து வந்தார்கள். இந்த நிலையில்தான் ரம்பாவின் நகைகள் காணாமல் போய் உள்ளன.  திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.
ரம்பாவுக்கும், பல்லவிக்கும் கடந்த வருடம் மோதல் ஏற்பட்டது. ரம்பாவும் சீனிவாசும் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை படுத்துவதாக பல்லவி போலீசில் புகார் அளித்து இருந்தார். இதனை ரம்பா மறுத்தார். நான் வெளிநாட்டில் இருக்கிறேன். என் மீது பல்லவி பொய் புகார் அளித்து இருக்கிறார் என்றார். இரு தரப்பிலும் மாறி மாறி போலீசில் புகார் அளித்தனர். தற்போது, மீண்டும் அவர்களுக்குள் குடும்ப தகராறு தலை தூக்கி உள்ளது. அதோடு ரம்பாவின் நகைகளும் கொள்ளை போய் உள்ளது.

Tuesday, December 30, 2014

On Tuesday, December 30, 2014 by farook press in ,    
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று  கூறிக் கொண்டு உலா வந்தார்.
அங்குள்ள அய்யப்பன் கோவிலின் பின்புறம் உள்ள அறையில் தங்கி இருந்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவரையும் தரிசிக்க தொடங் கினார்கள்.
தங்கள் குடும்ப பிரச்சினை, மனக்குறைகள் போன்றவற்றை சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்டனர். அவர்களிடம் உங்களுக்கு பேய் பிடித்து இருக்கிறது. அதை கட்டிப்பிடி வைத்தியம் மூலம் நிவர்த்தி செய்கிறேன் என்று கூறி பெண்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்.இதனால் சாமியார் அந்தப் பகுதியில் சாமியார் முத்த பாபா  என பிரபலமானார். நாளுக்கு நாள் பெண்களின் வருகை அதிகரித்தது. சாமி யாரின் சக்தி பற்றி அவரது உதவியாளர் சுப்பா ரெட்டி நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்தார். அதில் பில்லி, சூனியம், ஏவல், பேய், உடல் நலக்குறைவு போன்றவற்றை தீர்க்கும் அதிசய சாமியாரை சந்திக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்து இருந்தார்இதற்கிடையே போலி சாமியார்பற்றி போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. சாமியார் பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து மோசடி செய்வதாகவும் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் சாமியாரின் அறைக்குள் புகுந்து சோதனை நடத்தினார்கள். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி னார்கள். சாமியாரை 
2 வாரம் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.மேலும் அவரது நடவடிக்கைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் சாமியாரை மனநல மையத்தில் சேர்க்க கோர்ட்டு உத்தர விட்டது. அதன்படி அவர் மனநல மையத்தில் சேர்க்கப்பட்டார்.

போலீசார்  சாமியாரின் பெண் பகதட்க்ளுக்கு முத்தம் கொடுப்பதும் அவரது தவறான நடவடிக்கைகளையும்  உள்ளூர் சேனலில் பார்த்தனர். ஆண்கள் வந்தால் அவர்களுக்கு அவர் ஒரு எலுமிச்சை பழம் மட்டும்  கொடுப்பார் பெண்கள் வந்தால் மட்டும் அவர்களை கட்டிபிடித்து முத்தம் கொடுத்து ஆசிர்வதிப்பார்.