Thursday, September 08, 2016
Tuesday, September 06, 2016
நைஜீரிய இஸ்லாமிய இளைஞருக்கும் காரைக்கால் பெண்ணுக்கும் இந்து முறைப்படி காரைக்காலில் திருமணம் நடைபெற்றது.
காரைக்கால் பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவர், காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இவரது மகள் சத்தியபிரியா என்கிற சனாவுக்கும், நைஜீரியாவைச் சேர்ந்த அகமது பெல்லோ பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.பால்பிண்டார் இஸôக் மகன் இப்ராஹிம் இஸôக்குக்கும் காரைக்காலில் உள்ள திருமண அரங்கு ஒன்றில் இந்து முறைப்படி திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது.
இதில், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இத்திருமணம் குறித்து மணமகள் குடும்பத்தினர் கூறும்போது, சத்தியபிரியா புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தபோது, நைஜீரியாவைச் சேர்ந்த இப்ராஹிம் இஸôக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களுக்கு இரு குடும்பத்தினரின் ஒப்புதலுடன் காரைக்காலில் திருமணம் நடைபெற்றது. மணமகள், காரைக்காலில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். மணமகன் நைஜீரியாவில் தொழில் செய்துவருகிறார் என்றனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...