Thursday, September 08, 2016
Tuesday, September 06, 2016
நைஜீரிய இஸ்லாமிய இளைஞருக்கும் காரைக்கால் பெண்ணுக்கும் இந்து முறைப்படி காரைக்காலில் திருமணம் நடைபெற்றது.
காரைக்கால் பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவர், காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இவரது மகள் சத்தியபிரியா என்கிற சனாவுக்கும், நைஜீரியாவைச் சேர்ந்த அகமது பெல்லோ பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.பால்பிண்டார் இஸôக் மகன் இப்ராஹிம் இஸôக்குக்கும் காரைக்காலில் உள்ள திருமண அரங்கு ஒன்றில் இந்து முறைப்படி திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது.
இதில், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இத்திருமணம் குறித்து மணமகள் குடும்பத்தினர் கூறும்போது, சத்தியபிரியா புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தபோது, நைஜீரியாவைச் சேர்ந்த இப்ராஹிம் இஸôக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களுக்கு இரு குடும்பத்தினரின் ஒப்புதலுடன் காரைக்காலில் திருமணம் நடைபெற்றது. மணமகள், காரைக்காலில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். மணமகன் நைஜீரியாவில் தொழில் செய்துவருகிறார் என்றனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...