Tuesday, September 06, 2016
நைஜீரிய இஸ்லாமிய இளைஞருக்கும் காரைக்கால் பெண்ணுக்கும் இந்து முறைப்படி காரைக்காலில் திருமணம் நடைபெற்றது.
காரைக்கால் பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவர், காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இவரது மகள் சத்தியபிரியா என்கிற சனாவுக்கும், நைஜீரியாவைச் சேர்ந்த அகமது பெல்லோ பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.பால்பிண்டார் இஸôக் மகன் இப்ராஹிம் இஸôக்குக்கும் காரைக்காலில் உள்ள திருமண அரங்கு ஒன்றில் இந்து முறைப்படி திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது.
இதில், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இத்திருமணம் குறித்து மணமகள் குடும்பத்தினர் கூறும்போது, சத்தியபிரியா புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தபோது, நைஜீரியாவைச் சேர்ந்த இப்ராஹிம் இஸôக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களுக்கு இரு குடும்பத்தினரின் ஒப்புதலுடன் காரைக்காலில் திருமணம் நடைபெற்றது. மணமகள், காரைக்காலில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். மணமகன் நைஜீரியாவில் தொழில் செய்துவருகிறார் என்றனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment