Showing posts with label சிக்மகளூர். Show all posts
Showing posts with label சிக்மகளூர். Show all posts
Sunday, October 19, 2014
சிக்மகளூர் மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகாவில் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு ஒரு அரசியல் பிரமுகரின் மகளின் ஆபாச படம் ஒன்று செல்போன்களில் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக என்.ஆர்.புராவை சேர்ந்த அகமத் பாஷா, சிவகுமார், செபாஸ்டின், தஸ்தகீர், கிருஷ்ணா, அசோக், சுஜீத், சந்தோஷ் சர்மா உள்ளிட்ட 8 பேரை என்.ஆர்.புரா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் கடந்த 12–10–2012 அன்று ஜாமீனில் வெளியே வந்த 8 பேரும், தங்களது மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும் என்று என்.ஆர்.புரா தாசில்தார் மூலமாக ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்தனர்.ஆனால் அதன் பின்னர் அவர்களது கடிதம் தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த 8 பேரும் சிக்மகளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.பின்னர் அவர்கள் கலெக்டர் சேகரப்பாவிடம் கண்ணீர் மல்க ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–நாங்கள் ஆபாச படங்களை செல்போனில் பகிர்ந்து கொண்டதாக போலீசார் எங்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பொய்யான வழக்கு எனக் கூறியும், இந்த வழக்கில் இருந்து விடுக்கவிக்கவும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினோம். ஆனால் இதுவரை எங்களது கடிதத்திற்கு பதில் கடிதம் வரவில்லை.மேலும் இந்த பொய் வழக்கால் எங்களது 8 பேரின் குடும்பத்தினரும் பெரும் அவமானத்திற்கு உள்ளாகியுள்ளனர். நாங்களும் மனவேதனை அடைந்துள்ளோம். எனவே பொய்யாக தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களை கருணை கொலை செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சேகரப்பா, இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதைதொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
ஆபாச படங்கள் விற்றதாக கைதான 8 பேரும் கருணை கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கோரி மனு கொடுத்த சம்பவம் சிக்மகளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆபாச படங்கள் விற்றதாக கைதான 8 பேரும் கருணை கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கோரி மனு கொடுத்த சம்பவம் சிக்மகளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
