Showing posts with label மேட்டூர். Show all posts
Showing posts with label மேட்டூர். Show all posts
Tuesday, September 02, 2014
மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விதவை சான்று வழங்க பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:&
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவருடைய கணவர் சரவணன் கடந்த 2012-ம்ஆண்டு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதனையடுத்து விதவை சான்று கேட்டு சுதா கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பரிசீலனை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சுதாவின் விண்ணப்பம் தொடர்பான கோப்பு கடந்த மே மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது. அங்கு எழுத்தராக பணிபுரியும் சீனிவாசன்(வயது 32) என்பவர் அந்த கோப்பை, மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கூலித்தொழிலாளியான சுதா அவ்வளவு பணத்தை தன்னால் தர இயலாது என கூறி உள்ளார். இதனையடுத்து ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கோப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று சீனிவாசன் கூறினார்.
இதுதொடர்பாக சுதா சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பூபதிராஜன், நடராஜன் மற்றும் போலீசார் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சுதா அங்கு சென்று எழுத்தர் சீனிவாசனிடம் ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.
அதை வாங்கியபோது அந்த பகுதியில் மறைந்திருந்த போலீசார், எழுத்தர் சீனிவாசனை கையும்,களவுமாக பிடித்தனர். அவர் லஞ்சமாக பெற்ற ரூ. 10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து சீனிவாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:&
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவருடைய கணவர் சரவணன் கடந்த 2012-ம்ஆண்டு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதனையடுத்து விதவை சான்று கேட்டு சுதா கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பரிசீலனை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சுதாவின் விண்ணப்பம் தொடர்பான கோப்பு கடந்த மே மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது. அங்கு எழுத்தராக பணிபுரியும் சீனிவாசன்(வயது 32) என்பவர் அந்த கோப்பை, மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கூலித்தொழிலாளியான சுதா அவ்வளவு பணத்தை தன்னால் தர இயலாது என கூறி உள்ளார். இதனையடுத்து ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கோப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று சீனிவாசன் கூறினார்.
இதுதொடர்பாக சுதா சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பூபதிராஜன், நடராஜன் மற்றும் போலீசார் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சுதா அங்கு சென்று எழுத்தர் சீனிவாசனிடம் ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.
அதை வாங்கியபோது அந்த பகுதியில் மறைந்திருந்த போலீசார், எழுத்தர் சீனிவாசனை கையும்,களவுமாக பிடித்தனர். அவர் லஞ்சமாக பெற்ற ரூ. 10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து சீனிவாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
