Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in ,    
மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில்  விதவை சான்று வழங்க பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:&

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவருடைய கணவர் சரவணன் கடந்த 2012-ம்ஆண்டு  சாலை விபத்தில் இறந்து விட்டார். இதனையடுத்து விதவை சான்று கேட்டு சுதா கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பரிசீலனை செய்தனர். 
இதனைத்தொடர்ந்து சுதாவின் விண்ணப்பம் தொடர்பான கோப்பு கடந்த மே மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது. அங்கு எழுத்தராக பணிபுரியும் சீனிவாசன்(வயது 32) என்பவர் அந்த கோப்பை, மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கூலித்தொழிலாளியான சுதா அவ்வளவு பணத்தை தன்னால் தர இயலாது என கூறி உள்ளார். இதனையடுத்து ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கோப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று சீனிவாசன் கூறினார்.
இதுதொடர்பாக சுதா சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பூபதிராஜன், நடராஜன் மற்றும் போலீசார் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலக வளாக பகுதியில்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சுதா அங்கு சென்று எழுத்தர் சீனிவாசனிடம் ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். 
அதை வாங்கியபோது அந்த பகுதியில் மறைந்திருந்த போலீசார், எழுத்தர் சீனிவாசனை கையும்,களவுமாக பிடித்தனர். அவர் லஞ்சமாக பெற்ற ரூ. 10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து சீனிவாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

0 comments: