Tuesday, September 02, 2014
மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விதவை சான்று வழங்க பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:&
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவருடைய கணவர் சரவணன் கடந்த 2012-ம்ஆண்டு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதனையடுத்து விதவை சான்று கேட்டு சுதா கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பரிசீலனை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சுதாவின் விண்ணப்பம் தொடர்பான கோப்பு கடந்த மே மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது. அங்கு எழுத்தராக பணிபுரியும் சீனிவாசன்(வயது 32) என்பவர் அந்த கோப்பை, மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கூலித்தொழிலாளியான சுதா அவ்வளவு பணத்தை தன்னால் தர இயலாது என கூறி உள்ளார். இதனையடுத்து ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கோப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று சீனிவாசன் கூறினார்.
இதுதொடர்பாக சுதா சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பூபதிராஜன், நடராஜன் மற்றும் போலீசார் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சுதா அங்கு சென்று எழுத்தர் சீனிவாசனிடம் ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.
அதை வாங்கியபோது அந்த பகுதியில் மறைந்திருந்த போலீசார், எழுத்தர் சீனிவாசனை கையும்,களவுமாக பிடித்தனர். அவர் லஞ்சமாக பெற்ற ரூ. 10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து சீனிவாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:&
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவருடைய கணவர் சரவணன் கடந்த 2012-ம்ஆண்டு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதனையடுத்து விதவை சான்று கேட்டு சுதா கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பரிசீலனை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சுதாவின் விண்ணப்பம் தொடர்பான கோப்பு கடந்த மே மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது. அங்கு எழுத்தராக பணிபுரியும் சீனிவாசன்(வயது 32) என்பவர் அந்த கோப்பை, மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கூலித்தொழிலாளியான சுதா அவ்வளவு பணத்தை தன்னால் தர இயலாது என கூறி உள்ளார். இதனையடுத்து ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கோப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று சீனிவாசன் கூறினார்.
இதுதொடர்பாக சுதா சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பூபதிராஜன், நடராஜன் மற்றும் போலீசார் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சுதா அங்கு சென்று எழுத்தர் சீனிவாசனிடம் ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.
அதை வாங்கியபோது அந்த பகுதியில் மறைந்திருந்த போலீசார், எழுத்தர் சீனிவாசனை கையும்,களவுமாக பிடித்தனர். அவர் லஞ்சமாக பெற்ற ரூ. 10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து சீனிவாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment