Tuesday, September 02, 2014
மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விதவை சான்று வழங்க பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:&
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவருடைய கணவர் சரவணன் கடந்த 2012-ம்ஆண்டு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதனையடுத்து விதவை சான்று கேட்டு சுதா கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பரிசீலனை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சுதாவின் விண்ணப்பம் தொடர்பான கோப்பு கடந்த மே மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது. அங்கு எழுத்தராக பணிபுரியும் சீனிவாசன்(வயது 32) என்பவர் அந்த கோப்பை, மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கூலித்தொழிலாளியான சுதா அவ்வளவு பணத்தை தன்னால் தர இயலாது என கூறி உள்ளார். இதனையடுத்து ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கோப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று சீனிவாசன் கூறினார்.
இதுதொடர்பாக சுதா சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பூபதிராஜன், நடராஜன் மற்றும் போலீசார் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சுதா அங்கு சென்று எழுத்தர் சீனிவாசனிடம் ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.
அதை வாங்கியபோது அந்த பகுதியில் மறைந்திருந்த போலீசார், எழுத்தர் சீனிவாசனை கையும்,களவுமாக பிடித்தனர். அவர் லஞ்சமாக பெற்ற ரூ. 10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து சீனிவாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:&
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவருடைய கணவர் சரவணன் கடந்த 2012-ம்ஆண்டு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதனையடுத்து விதவை சான்று கேட்டு சுதா கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பரிசீலனை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சுதாவின் விண்ணப்பம் தொடர்பான கோப்பு கடந்த மே மாதம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது. அங்கு எழுத்தராக பணிபுரியும் சீனிவாசன்(வயது 32) என்பவர் அந்த கோப்பை, மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கூலித்தொழிலாளியான சுதா அவ்வளவு பணத்தை தன்னால் தர இயலாது என கூறி உள்ளார். இதனையடுத்து ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கோப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று சீனிவாசன் கூறினார்.
இதுதொடர்பாக சுதா சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பூபதிராஜன், நடராஜன் மற்றும் போலீசார் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சுதா அங்கு சென்று எழுத்தர் சீனிவாசனிடம் ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.
அதை வாங்கியபோது அந்த பகுதியில் மறைந்திருந்த போலீசார், எழுத்தர் சீனிவாசனை கையும்,களவுமாக பிடித்தனர். அவர் லஞ்சமாக பெற்ற ரூ. 10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து சீனிவாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment