Showing posts with label jarja. Show all posts
Showing posts with label jarja. Show all posts
Saturday, August 30, 2014
ஐக்கிய அரபு எமிரேட்சின் நகரங்களுள் ஒன்றான ஷார்ஜாவில் 118 கிலோகிராம் போதைப்பொருளுடன் 10 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
போதைப்பொருள் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காலித் துறைமுக பகுதியை திடிரென சுற்றிவளைத்த பொலிஸ் குழு இந்த கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை 6 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பிய நிலையில் 4 பேர் ஸ்தலத்திலேயே கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் விரைவாக செயற்பட்ட பொலிசார் சற்று நேரத்திற்குள் தப்பியோடிய 6 கடத்தல்காரர்களையும் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 118 கிலோ போதைப்பொருளில் 110 கிலோ ஹசீஷா 8 கிலோ ஒபியம் மற்றும் கிரைஷ்டல் என்பனவாகும்.
கைது செய்யப்பட்டவர்கள் அரேபிய, ஆசிய, மற்றும் ஆபிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் என பொலிசார் குறிப்பிட்ட அதே நேரம் அவர்கள் குறிப்பாக எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என குறிப்பிடவில்லை.
அண்மைக்காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைப்பற்றப்பட்ட அதிக எடை கொண்ட போதைப்பொருட்கள் இவையே என ஷார்ஜா பொலிஸ் பிரிகேடியர் முஹம்மத் ஈத் அல் மஸ்லும் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் சட்டத்தின் முன் ஆஜராக்கப்படவுள்ளனர்.

Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...