Saturday, August 30, 2014
ஐக்கிய அரபு எமிரேட்சின் நகரங்களுள் ஒன்றான ஷார்ஜாவில் 118 கிலோகிராம் போதைப்பொருளுடன் 10 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
போதைப்பொருள் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காலித் துறைமுக பகுதியை திடிரென சுற்றிவளைத்த பொலிஸ் குழு இந்த கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை 6 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பிய நிலையில் 4 பேர் ஸ்தலத்திலேயே கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் விரைவாக செயற்பட்ட பொலிசார் சற்று நேரத்திற்குள் தப்பியோடிய 6 கடத்தல்காரர்களையும் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 118 கிலோ போதைப்பொருளில் 110 கிலோ ஹசீஷா 8 கிலோ ஒபியம் மற்றும் கிரைஷ்டல் என்பனவாகும்.
கைது செய்யப்பட்டவர்கள் அரேபிய, ஆசிய, மற்றும் ஆபிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் என பொலிசார் குறிப்பிட்ட அதே நேரம் அவர்கள் குறிப்பாக எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என குறிப்பிடவில்லை.
அண்மைக்காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைப்பற்றப்பட்ட அதிக எடை கொண்ட போதைப்பொருட்கள் இவையே என ஷார்ஜா பொலிஸ் பிரிகேடியர் முஹம்மத் ஈத் அல் மஸ்லும் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் சட்டத்தின் முன் ஆஜராக்கப்படவுள்ளனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment