Saturday, August 30, 2014
உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில், உடுமலை வட்டாரத்தில் பெரிய வெங்காயம் சாகுபடியை அதிகரிக்க நடப்பு ஆண்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டருக்கு ஆகும் சாகுபடி செலவான ரூ. 12 ஆயிரத்தை மானியமாக தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படுகிறது. எங்கெல்லாம் சின்ன வெங்காயம் விளைகிறதோ அங்கெல்லாம் பெரிய வெங்காயம், வெள்ளை வெங்காயம் ஆகியவற்றை பயிரிடலாம்.
பெரிய வெங்காய சாகுபடியில் ஊடுபயிராக வெண்டை, முள்ளங்கி, கீரை வகைகளை பயிரிட்டு கூடுதல் வருமானம் பெறலாம். பெரிய வெங்காயம் ஹெக்டேருக்கு 16 டன் வரை மகசூல் கிடைக்கும். உடுமலையில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
பெரிய வெங்காயத்தில் ஊடுபயிர் சாகுபடி மூலம் பலவித பூச்சிகள் பெருகாமல் தடுக்கலாம். காய்கறி உற்பத்திக்கு தற்போது ஒருங்கிணைந்த உர உபயோகம் மான்யமாக ரூ.1200 வழங்கி அதற்கு இடுபொருளான பாஸ்பேட் பாக்ட்ரீயா, அசோஸ்பைரில்லம் வழங்கப்படும். விவசாயிகள் குழுக்களாக பதிவு செய்தால் அநேக சலுகைகளோடு காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment