Saturday, August 30, 2014
திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 34 ஆயிரத்து 600 பேர் வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளதாக கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிரதமர் மக்கள் நிதித் திட்டம் (ஜன் தன் யோஜனா திட்டம்) நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், திட்ட இயக்குநர் திரவியம், ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா சரவணன், கனரா வங்கி மண்டல பொது மேலாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கலெக்டர் கோவிந்தராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:
வங்கிக் கணக்குகள் மூலம் சேமிக்கப்படும் பணம் பாதுகாப்பாகவும், அப்பணத்திற்கு வட்டியும் கிடைக்கும். கணக்கு தொடங்கும் சமயத்தில் ஒரு ஏ.டி.எம், டெபிட் கார்டு வழங்கப்படும். இதன் மூலம் விரும்பும் போது எந்த வங்கி ஏ.டி.எம்., லும் அனைத்து நாட்களிலும் பணம் எடுத்துக் கொள் ளலாம். இந்த அட்டையைப் பயன்படுத்தி வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பொருட்கள் அல்லது சேவை கள் பெறமுடியும். மேலும், இந்த அட்டைக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உள்ளடக்கிய விபத்து காப்பீடு வசதி உள்ளது. அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கிற்கு குறைந்தபட்ச நிலுவைத் தொ கை எதுவும் தேவை இல்லை.
பணத்தை எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் போதெல்லாம் வங்கிக் கண க்கில் போடவோ, எடுக்கவோ செய்யலாம். இது தவிர தேசத்தின் எப்பகுதிக்கும் பணம் பாரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஆதார் எண்ணை சேமிப்பு கணக்கில் இணைக்க முடி யும். அரசு மானியத் தொ கைகள், சமையல் எரிவாயு போன்றவை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் பங்கேற்க இயலும்.
இந்த வங்கி கணக்கின் மூலம் வங்கியில் ரூ.1000 கடன் பெற்று அத னை 6 மாத காலம் வங்கிக் கணக்கில் திருப்தியான வரவு செலவு செய்திருந்தால் மிகை ப்பற்றுக் கடன் பெற வாய்ப்பு உள்ளது. இக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அரசின் மானியங்கள் மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை நேரடியாக தங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த திட்டம் அறிவித்த நாளான கடந்த 16ம் தேதி முதல் 27ம் தேதி வரை மாவட்டத்தில் 34 ஆயிரத்து 600 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக வங்கியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இது மிகவும் பாராட்டுக்குரியது. இன்றைய தினம் இந்த திட்டத்தின் வாயிலாக கணக்குகள் தொடங்க காலை முதல் அனைத்து வங்கியைச் சார்ந்த அலுவலர்கள் இங்கே முகாமிட்டு இப்பணியை மேற்கொண்டுள்ளார்கள். எனவே, இது போன்ற வங்கிக் கணக்கினை ஒவ்வொருவரும் தொடங்கி அதன் மூலம் அரசின் மானியங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்வதுடன் தங்கள் பகுதிகளி லுள்ளவர்களையும் இது போன்ற வங்கி கணக்கு ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு கோவிந்தராஜ் பேசினார்.
இக்கூட்டத்தில் அனை த்து வங்கி அலுவலர்களும், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனா.
முடி வில் ஒவ்வொரு வங்கியிலும் இந்த திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு தொடங்கியவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகத்தை கலெக்டர் கோவிந்தராஜ் வழங்கினார்;
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment