Showing posts with label kereala. Show all posts
Showing posts with label kereala. Show all posts
Saturday, September 13, 2014
கொழிஞ்சாம்பாறை, செப். 13–
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட மதுவிலக்கு போலீஸ் அதிகாரி சுரேசுக்கு லாரியில் எரிசாராயம் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உதவி அதிகாரிகளான சதீஸ், முரளிதரன், சஞ்சீவ் மற்றும் போலீசாருடன் குழல்மன்னம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது கோவையில் இருந்து வேலந்தாவலத்துக்கு ஒரு லாரி வந்தது. லாரியை நிறுத்துமாறு சைகை காட்டியதும் லாரி நின்றது.
அதிரடியாக சென்று பார்த்தபோது லாரியில் எந்த பாரமும் இல்லாமல் காலியாக இருந்தது. எனினும் டிரைவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. லாரியை ஓரங்கட்டி அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
அப்போது டீசல் டேங்க் அருகே ரகசிய அறை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ரகசிய அறையை சோதனை செய்ததில் 1000 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. லாரியை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த அங்கமாளியை சேர்ந்த டிரைவர் அஜீசை போலீசார் கைது செய்தனர்.
அதில் வேலந்தாவலம் வழியாக இதுவரை 98 முறை எரிசாராயம் கடத்தியுள்ளோம். கடத்தலுக்கு சில அதிகாரிகள் எங்களுக்கு உதவி செய்தனர். கோவையில் உள்ள ஒரு முக்கிய இடத்தில் இன்னும் 70 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்துள்ளோம். கேரளாவில் மதுபார்கள் மூடப்படுவதையொட்டி இருப்பு உள்ள அனைத்து சரக்குகளையும் கடத்தி பணமாக்க முயன்றோம் என்று கூறினார்.
இது குறித்து மதுவிலக்கு அதிகாரி சுரேஷ் தலைமையில் எரிசாராயம் கடத்தலுக்கு அதிகாரிகள் துணைபோனார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. மேலும் கோவையில் பதுக்கியுள்ள 70 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் குறித்து கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட 1000 லிட்டர் எரிசாராயத்தின் மதிப்பு ரூ.50 லட்சம். இன்னும் கோவையில் பதுக்கியுள்ள 70 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மீட்பது குறித்தும், அதை பதுக்கியவர்கள் குறித்தும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
