Showing posts with label kereala. Show all posts
Showing posts with label kereala. Show all posts
Saturday, September 13, 2014
கொழிஞ்சாம்பாறை, செப். 13–
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட மதுவிலக்கு போலீஸ் அதிகாரி சுரேசுக்கு லாரியில் எரிசாராயம் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உதவி அதிகாரிகளான சதீஸ், முரளிதரன், சஞ்சீவ் மற்றும் போலீசாருடன் குழல்மன்னம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது கோவையில் இருந்து வேலந்தாவலத்துக்கு ஒரு லாரி வந்தது. லாரியை நிறுத்துமாறு சைகை காட்டியதும் லாரி நின்றது.
அதிரடியாக சென்று பார்த்தபோது லாரியில் எந்த பாரமும் இல்லாமல் காலியாக இருந்தது. எனினும் டிரைவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. லாரியை ஓரங்கட்டி அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
அப்போது டீசல் டேங்க் அருகே ரகசிய அறை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ரகசிய அறையை சோதனை செய்ததில் 1000 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. லாரியை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த அங்கமாளியை சேர்ந்த டிரைவர் அஜீசை போலீசார் கைது செய்தனர்.
அதில் வேலந்தாவலம் வழியாக இதுவரை 98 முறை எரிசாராயம் கடத்தியுள்ளோம். கடத்தலுக்கு சில அதிகாரிகள் எங்களுக்கு உதவி செய்தனர். கோவையில் உள்ள ஒரு முக்கிய இடத்தில் இன்னும் 70 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்துள்ளோம். கேரளாவில் மதுபார்கள் மூடப்படுவதையொட்டி இருப்பு உள்ள அனைத்து சரக்குகளையும் கடத்தி பணமாக்க முயன்றோம் என்று கூறினார்.
இது குறித்து மதுவிலக்கு அதிகாரி சுரேஷ் தலைமையில் எரிசாராயம் கடத்தலுக்கு அதிகாரிகள் துணைபோனார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. மேலும் கோவையில் பதுக்கியுள்ள 70 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் குறித்து கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட 1000 லிட்டர் எரிசாராயத்தின் மதிப்பு ரூ.50 லட்சம். இன்னும் கோவையில் பதுக்கியுள்ள 70 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மீட்பது குறித்தும், அதை பதுக்கியவர்கள் குறித்தும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
