Saturday, September 13, 2014
கொழிஞ்சாம்பாறை, செப். 13–
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட மதுவிலக்கு போலீஸ் அதிகாரி சுரேசுக்கு லாரியில் எரிசாராயம் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உதவி அதிகாரிகளான சதீஸ், முரளிதரன், சஞ்சீவ் மற்றும் போலீசாருடன் குழல்மன்னம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது கோவையில் இருந்து வேலந்தாவலத்துக்கு ஒரு லாரி வந்தது. லாரியை நிறுத்துமாறு சைகை காட்டியதும் லாரி நின்றது.
அதிரடியாக சென்று பார்த்தபோது லாரியில் எந்த பாரமும் இல்லாமல் காலியாக இருந்தது. எனினும் டிரைவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. லாரியை ஓரங்கட்டி அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
அப்போது டீசல் டேங்க் அருகே ரகசிய அறை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ரகசிய அறையை சோதனை செய்ததில் 1000 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. லாரியை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த அங்கமாளியை சேர்ந்த டிரைவர் அஜீசை போலீசார் கைது செய்தனர்.
அதில் வேலந்தாவலம் வழியாக இதுவரை 98 முறை எரிசாராயம் கடத்தியுள்ளோம். கடத்தலுக்கு சில அதிகாரிகள் எங்களுக்கு உதவி செய்தனர். கோவையில் உள்ள ஒரு முக்கிய இடத்தில் இன்னும் 70 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்துள்ளோம். கேரளாவில் மதுபார்கள் மூடப்படுவதையொட்டி இருப்பு உள்ள அனைத்து சரக்குகளையும் கடத்தி பணமாக்க முயன்றோம் என்று கூறினார்.
இது குறித்து மதுவிலக்கு அதிகாரி சுரேஷ் தலைமையில் எரிசாராயம் கடத்தலுக்கு அதிகாரிகள் துணைபோனார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. மேலும் கோவையில் பதுக்கியுள்ள 70 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் குறித்து கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட 1000 லிட்டர் எரிசாராயத்தின் மதிப்பு ரூ.50 லட்சம். இன்னும் கோவையில் பதுக்கியுள்ள 70 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மீட்பது குறித்தும், அதை பதுக்கியவர்கள் குறித்தும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
அது 1995 ஆம் ஆண்டின் பிற்பகுதி . சென்னையில் நடந்த அந்த சினிமா விருதுவிழாவில் விருது வாங்குவதற்கு மேடை ஏறிகிறார் அந்த நடிகர். அந்த நடிக...
-
உடுமலை,: உடுமலை நேதாஜி மைதானத்தில் தென்னிந்திய கபடி போட்டி இன்று துவங்கி 26ம் தேதி முடிய 3 நாட்கள் நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி,...
0 comments:
Post a Comment