Friday, June 17, 2016
உடுமலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடர வேண்டும் என நூலக வாசகர் வட்டம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் க.லெனின்பாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனப் பெருக்கம் ஆகியவற்றின் காரணமாக உடுமலை நகர்ப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் விபத்துகள் அதிகரித்து வருகிறது. மேலும் சிலர் சாலையின் இருபுறங்களிலும் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியுள்ளனர்.
இதன் காரணமாக சாலைகள் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகள் உடுமலை நகரில் நான்கு வழிச் சாலை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்ட நான்கு வ ழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். எனவே எந்த நிலையிலும் திட்டப் பணிகளைத் தாமதப்படுத்தாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி சா லைகளை அகலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
உடுமலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடர வேண்டும் என நூலக வாசகர் வட்டம் சார்பில் வலியுறுத்...

0 comments:
Post a Comment