Saturday, September 13, 2014
குனியமுத்தூர், செப்.13–
கோவை ஈச்னாரி பாட சாலை வீதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 27). இவர் இன்று காலை 6.30 மணியளவில் பால் வாங்குவதற்காக வெளியே வந்தார்.
கடைக்கு சென்று பால் வாங்கிவிட்டு வீடு திரும்பிய போது அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் மழைக்கோட்டு அணிந்தபடி நின்று கொண்டிருந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கலைச்செல்வியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் கூறம்போது பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். நகைகள் அணிந்து சாலையில் வரும்போது அவை வெளியே தெரியாத வண்ணம் சேலை அல்லது துப்பட்டாவால் மறைத்து கொள்ள வேண்டும்.
சந்தேகப்படும் படியாக நபர்கள் யாராவது பின் தொடர்ந்தாலோ அல்லது தென்பட்டாலோ அவர்கள் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நகை பறிப்பு சம்பவத்தை தடுக்க போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment