Saturday, September 13, 2014
கோவை, செப்.13–
தமிழக பா.ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் மன பலத்துக்கும், பண பலத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தலாகும். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் மிரட்டப்படுவதும், கடத்தப்படுவதும் நடந்து வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தால் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினரை போல் பேசுகிறார்கள்.
தற்போது நடைபெறும் இந்த தேர்தல் தேவையில்லாத ஒன்றாகும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சியின் மேயராக இருந்தவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கட்சிக்கு மாற்றாக பா.ஜனதா கட்சி போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு முழுமையாக எங்களுக்கு கிடைத்துள்ளது. இதேபோல் தேர்தலில் ஒதுங்கியிருக்கும் மற்றும் புறக்கணித்திருக்கும் கட்சிகளும் பா.ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர்கள் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என கோவையில் முகாமிட்டுள்ளனர். பிரசாரத்துக்கு குவிந்துள்ள அமைச்சர்கள் மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்க இதேபோல் வந்திருந்தால் அவர்களை வரவேற்று இருப்போம்.
கோவை பா.ஜனதா வேட்பாளர் நல்ல திறமையானவர். அவரை இந்த தேர்தலில் வெற்றி பெற வைத்தால் கோவை மாநகரை சிறந்த நகரமாக உருவாக்க பாடுபடுவார்.
குஜராத் மாநிலம் போல் கோவை மாநகரை சிறந்த நகரமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுப்பார். இதை உணர்ந்து மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். தமிழக மீனவர் பிரச்சினையில் தமிழக பா.ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பா.ஜனதா வேட்பாளர் நந்தகுமார், மாவட்ட செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வக்குமார், கூட்டணி கட்சி தலைவர்கள் மோகன் குமார், தமிழ்முருகன், மயில்சாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நி...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்...
-
சேவூர் அருகே வியாபாரியிடம் வழிப்பறி செய்து, காவலரைத் தாக்கிக் கடித்துவிட்டு, தப்பியோட முயன்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவிநாசி...
0 comments:
Post a Comment