Saturday, September 13, 2014
வால்பாறை, செப்.13–
கோவை மாவட்டம் வால்பாறை டேன்டீ எஸ்டேட்டில் சின்கோனா 2–வது குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் கொண்ட கூட்டம் சுற்றி திரிந்து வருகின்றன.
பகலில் வனப்பகுதியில் இருக்கும் காட்டு யானைகள் இரவில் குடியிருப்பு பகுதிகள் உலா வந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்தியும், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை தின்றும் சேதப்படுத்தி வந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு தாய் யானை ஒன்று தனது குட்டியுடன் வனப் பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்றன. அப்போது தாய் யானை கால் தவறி குடியிருப்பு பகுதிக்கு குடிதண்ணீர் வழங்கும் தொட்டிக்குள் விழுந்தது.
இதையடுத்து யானை கடுமையாக பிளிறியது. யானையின் அலறல் சத்தம் கேட்டு அந்த குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது காட்டு யானைகள் கூட்டம் தண்ணீர் தொட்டியை சுற்றி நின்று கொண்டிருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் விரைந்து வந்த வனத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட முயன்றனர். ஆனால் காட்டு யானைகள் ஆக்கிரஷோமாக இருந்ததால் மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை.
இதையடுத்து இன்று காலை மீட்பு பணியில் ஈடுபட ஆரம்பித்தனர். தண்ணீர் தொட்டிக்குள் ரப்பர் தூள்கள், மரக்கட்டைகள் மற்றும் மண் மூட்டைகளை போட்டு யானையை மேலே கொண்ட வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment