Wednesday, July 19, 2017

On Wednesday, July 19, 2017 by Tamilnewstv   
திருச்சி 19.7.17
திருச்சி சமூக நலத்துறை சார்பில் பெண்களின் பிரச்சனை மற்றும் பெண்களுக்கு என்ன சட்ட என்பதை விளக்க விழிப்புணர்வு முகாம்மத்திய பேருந்து நிலையம்அருகே உள்ள தனியாhபள்ளி; அரங்கில்நடைபெற்றது
அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி ஆகிய 12 மாவட்டங்களிலிருந்து பெண்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்அதில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து எப்படி பாதுகாப்பது என்ற குறித்த விளக்க உரைகள் பங்கு பெற்ற பெண்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது இந்த முகாம் தமிpழகத்தில் 5 மாவட்டகளில் ஒரு மாவட்டமாக திருச்சியில் ஒரு பகுதி நடைபெற்றது 

இந்நிகழ்ச்சியை சட்டக்ஆலோசனை மையத்தின் செயலர் கீதா துவங்கி வைத்தார். அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் கௌரி விளக்கமளித்தாh.;இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் சமூக நலத்துறை அதிகாரி உஷா ராணி அவர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது

Friday, July 14, 2017

On Friday, July 14, 2017 by Tamilnewstv   
திருச்சி ஓ பி எஸ் வழியில் நடப்போம் அம்மாவின் ஆட்சியை மக்களுக்கு கொடுப்போம், திருச்சியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு

திருச்சி ஓ பி எஸ் வழியில் நடப்போம் அம்மாவின் ஆட்சியை மக்களுக்கு கொடுப்போம், திருச்சியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு
தமிழகத்தில் அம்மா இறந்தவுடன்   சதிகாரர்களின் பிடியில் இருந்தது தற்ப்போது தான் விடிவு பிறந்துள்ளது நாம் ஒன்று சேர்ந்து அம்மாவின் ஆட்சியை அம்மா வழியில் நடக்கும் ஓ பிஎஸ் அவர்களை ஆதரித்து ஓ பிஎஸ் அவர்களை முதல் ஆக்குவோம் எல்லாம் ஒன்று சேருவோம் முன்னால் அமைச்சர் பூனாட்சி கூறினார்   இந்நிநிகழ்ச்சியி ல் முன்னாள் அமைச்சர் பூனாட்சி பரஞ்சோதி முன்னாள் கோட்ட தலைவர் மனோகர் முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சை மனைவி கஸ்தூரி ஆகியோர் மற்றும் வி என் ஆர் செல்வம் , பிரேம் ஆனந்த் மற்றும்பல நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்       
On Friday, July 14, 2017 by Tamilnewstv   


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி..


நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியிருக்கிற சட்டத்திற்கு இதுவரை குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் மாநில அரசு பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 % சேர்க்கையில் இடஒதுக்கீடும் , மத்திய அரசு பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 15 % இடஒதுக்கீடும் செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டிய நிர்பந்தம் தமிழக அரசிற்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இது எதிர்ப்பார்த்த ஒன்று தான். தமிழக முதல்வர் உடனடியாக பிரதமரை நேரில் சந்தித்து, உள்துறை அமைச்சகத்தில் இருந்து குடியரசுத்தலைவரின் பார்வைக்கு செல்லாத அந்த சட்டங்களை குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற அனுப்பி வைக்க வேண்டும் என வலியறுத்த வேண்டும்.மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.  இதில் மேல்முறையீட்டுக்கு செல்வதில் எந்த பயனும் இல்லை.


மீத்தேன், ஷெல் போன்ற எரிவாயு திட்டங்களை மத்திய அரசு  முற்றிலும் கைவிடுவது தமிழ் மக்களின் உணர்வுகளை மதிப்பதாக அமையும். கதிராமங்கலத்தில் போராடுபவர்கள் மீது அடக்குமுறை செய்வது கண்டனத்திற்குரியது. கைது செய்யப்பட்டவர்க்ளை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.


தமிழகம் முழுவதும் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. மதுரையில் மதுக்கடைக்கு எதிராக போராடிய முத்தமிழன் படுகொலை செய்யப்பட்டார். திருச்சி மண்ணச்சநல்லூரில் கதிரேசன் என்பவரை  சாதாரண  பிரச்சனைக்காக கட்டி வைத்து அடித்து படுகொலை செய்துள்ளனர். இப்படி சாதி வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பது அதிர்ச்சியளிக்கிறது. தலித் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.


GST வரி விதிப்பால் விலைவாசி குறையும் என்று மோடி அறிவித்தார். ஆனால் அது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்க கூடிய வகையில்  அமைந்துள்ளது. இந்த வரி விதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்து ஒப்புதலை பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.


இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் பணம் கொடுத்தவர் , வாங்கியவர் பெயர் இல்லாத குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த  திருமாவளவன்...


மத்திய அரசு  எந்த அளவிற்கு தமிழக ஆட்சியாளர்கள் மீதும் ஆளும் கட்சியினர்  மீதும்  காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கிறது என்பதற்கான சான்று. பணம் கொடுத்தவர் வாங்கியவர்  யார் என்பது குறித்து இது வரை புலனாய்வு செய்யவில்லை. ஆனால் ஆளும் கட்சியினரை பழிவாங்க வேண்டும். அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அச்சுறுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் அது ஜோடிக்கப்பட்ட புனையப்பட்ட வழக்கு என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. என்றார். 

Monday, July 10, 2017

On Monday, July 10, 2017 by Tamilnewstv   

On Monday, July 10, 2017 by Tamilnewstv   

On Monday, July 10, 2017 by Tamilnewstv   
அதிமுக (அம்மா) எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முன்னிட்டு அகில இந்திய கபடி போட்டி
திருச்சி சிவானி கல்லூரியில் கடந்த 4 நாட்களாக நடந்தது. இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஹரியனா அணியும், பெண்கள் பிரிவில் ஹிமாசல பிரதேச அணியும் வெற்றிப் பெற்றன. இந்த அணிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோப்பை வழங்கினார்.


இப்போட்டியில் 29 மாநிலங்களிலிருந்து பெண்கள் பிரிவில் 21 அணிகளும், ஆண்கள் பிரிவில் 28 அணிகளும் கலந்து கொண்டனர். இன்று நடந்த இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஹிமாச்சல பிரதேச அணி ஹரியானாவை 33-12 என்ற கணக்கில் வென்றது. அதுப்போல ஆண்கள் பிரிவில் ஹரியனா அணி பஞ்சாப் அணியை 20 - 14 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது. இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற அணிக்கு ரொக்க பரிசாக 3 இலட்சம் 2 இலட்சம் 1 இலட்சம் மற்றும் கோப்பையும் வழங்கினர்.

போட்டியின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றானது கபடி இந்த விளையாட்டு தெற்காசிய அளவில் அதிகமாக விளையாடப்படுகிறது. 2004-ம் ஆண்டு முதல் நடந்து வரும் கபடி உலகப் கோப்பை போட்டியில் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் வென்றதில்லை. சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி நடத்த 1 கோடி ரூபாய் ஒதுக்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றார்.

இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில செயலாளர் சிவபதி தலைமை வகித்தனர். மேலும் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, காமராஜ், விஜயபாஸ்கர் துரைக்கண்ணு,M.P.க்கள் ரெத்தினவேல், விஜிலா MLA க்கள் முருகுமாறன், செல்வராஜ், சந்திரசேகர், பரமேஸ்வரி மற்றும் சிவானி கல்வி குழும தலைவர் செல்வராஜ் என பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, June 27, 2017

On Tuesday, June 27, 2017 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு கோவில்களில் முறையான பூஜை செய்திட ஏதுவாக பித்தளை தாம்பளம்,அமைசர் தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு மற்றும் தொங்கு விளக்கு உள்ளிட்ட சுமார் 2 .50 கோடி செலவிலான பூஜை பொருட்களை இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட 370 கோவில் பூசாரிகளிடம் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர்.



                        அதிமுகவை ஜெயலலிதா ஆன்மா வழிநடத்தி செல்கிறது.

               அறிஞர் அண்ணா காலத்தில் தலைமை, தலைவர் என்ற பதவி இல்லை.
              அதனை உருவாக்கியவர் கலைஞர் தான். அமைச்சர்
              வெல்ல மண்டி நடராஜன் திருச்சியில் பேட்டி -
              தற்போதைய அதிமுக தலைவர் யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு

Monday, June 26, 2017

On Monday, June 26, 2017 by Tamilnewstv in    


திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் நடைபெறும் கடைசி நாள் உற்சவம்
திருமங்கை ஆழ்வார் மங்கள சாசனம் செய்யப்பட்டதும் திருப்பால் ஆழ்வாரின் அவதார ஸ்தலமாக உறையூர் நாச்சியார் கோவில் கொண்டாடப்படுகிறது. இங்கு பிரதானமாக மகாலெட்சுமி பரிபூர்ண அனுகிரஹம் பெற்ற இத்திருக்கோயிலில்  பலப்பல என்று10 நாள் உற்சவம் என இன்று கடைசி நாள் உற்சவம் நடைப்பெற்றது.

இந்த மகாலெட்சுமி கர்ப்ப கிரகத்தில் புறப்பட்டு இந்த மண்டபத்தில் எழுந்தருளிருந்தும், இந்த உற்சவத்தில் சேவை செய்யும் அனைவருக்கும் மன்னும் நம்மை நாடி வரும் அடியார்க்கு எல்லாம் நலன்களும் கிடைக்க பெற்று தாயார் திருவடிகளை பிராத்திக்கிறேன் என்றார்.

பேட்டி: சுந்தர். பட்டர் (கோவில் அர்ச்சகர்)
On Monday, June 26, 2017 by Tamilnewstv   
திருச்சி                20.06.17
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் குடுப்பத்துடன் மனித சங்கிலி போராட்டம்
உச்சிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நான்காயிரம் மதுபான கடைகள் மூடப்பட்டன.
இதில் பணியாற்றிய இருபதாயிரம் பணியாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்ககோரியும்ää பணியிழந்த தொழிலாளர்களுக்கு அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுதுறை நிறுவனங்களில் அவர்களின் கல்வி அடிப்படையில் உடனடியாக பணி வழங்க கோரியும் பணிகொடை மற்றும் ஓய்வூதிய நிலுவ தொகையினையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்ககோரியும் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மாநில சிறப்பு தலைவர் பா.சுப்ரமணியன் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள்ள தங்கள் குடும்பத்தினருடன் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இப்போராட்டமானது உழவர்சந்தை மைதானத்திலிருந்து சாஸ்திரி சாலைவழியாக புதிய பாஸ்போர்ட் அலுவலகம் வரை நீடித்தது. முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுத்தி உழவர் சந்தை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி : கு.பாலசுப்ரமணியன் மாநில சிறப்புத்தலைவர்.