Monday, January 19, 2015
ஊதியூர் அருகே நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக இந்தாண்டு பக்தர்கள் அச்சமின்றி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை, தைப்பூசத்தையொட்டி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஒசூர், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனி செல்வது வழக்கம். இவர்கள் அனைவரும் ஈரோட்டிலிருந்து அரச்சலூர், காங்கயம், தாராபுரம் வழியாக பழனி செல்வர். பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் நாள்களில் ஈரோடு-பழனி மார்க்கத்தில் வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்திற்கிடையே தான் வாகனங்களை இயக்கி வருகின்றனர். அதேபோல, அதிகளவிலான வாகனப் போக்குவரத்தினால் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்தாண்டு காங்கயம் அருகே ஊதியூரை அடுத்துள்ள நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக தாராபுரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக பாதயாத்திரை பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். முன்பு இந்த சாலையின் பல்வேறு இடங்கள் மண் சாலையாக இருந்ததால், பக்தர்கள் இந்த சாலை வழியாக நடந்து செல்ல முடியாமல் இருந்தது.
தற்போது, தார்ச் சாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான பக்தர்கள் இந்த புதிய சாலையில் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பாதயாத்திரை பக்தர்கள் கூறுகையில், புதிதாகப் போடப்பட்டுள்ள இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து பெருமளவில் இல்லை என்பதால், பாதயாத்திரை பக்தர்கள் கவலையின்றி நடந்து செல்ல முடிகிறது. மேலும், பயண தூரமும் குறைந்துள்ளது. அடுத்தாண்டு, இன்னும் பெரும்பாலான பக்தர்கள் இந்த சாலை வழியாக பாதயாத்திரை மேற்கொள்வார்கள்.
இப்புதிய சாலை வழியாக பெரும்பாலான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதால், நொச்சிப்பாளையம்-தாராபுரம் பிரதான சாலையில் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து, வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர். விபத்து அச்சமின்றி பக்தர்களும் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment