Monday, January 19, 2015
உடுமலை வட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட சுமார் 22,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
உடுமலை நகரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க நடமாடும் வாகனங்கள் உள்பட 20 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், மொத்தம் 6.000 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்களிலும் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பேருந்து நிலையம் அருகில் போலியோ சிறப்பு முகாமில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமைத் துவக்கி வைத்தார். எம்எல்ஏ சி.சண்முகவேலு (மடத்துக்குளம்), மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் (பொள்ளாச்சி), உடுமலை நகராட்சித் தலைவர் கேஜிஎஸ்.ஷோபனா, துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், நகராட்சி ஆணையர்(பொ) கண்ணையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடுமலை ஒன்றியம்: உடுமலை ஒன்றியத்தில், எரிசனம்பட்டி, பெரியவாளவாடி, அமராவதி நகர் உள்ளிட்ட பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் மொத்தம் 110 மையங்கள், 5 நடமாடும் வாகனங்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில், சுமார் 16,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
திருச்சி பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம். திருச்சி...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
0 comments:
Post a Comment