Monday, January 19, 2015
உடுமலை வட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட சுமார் 22,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
உடுமலை நகரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க நடமாடும் வாகனங்கள் உள்பட 20 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், மொத்தம் 6.000 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்களிலும் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பேருந்து நிலையம் அருகில் போலியோ சிறப்பு முகாமில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமைத் துவக்கி வைத்தார். எம்எல்ஏ சி.சண்முகவேலு (மடத்துக்குளம்), மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் (பொள்ளாச்சி), உடுமலை நகராட்சித் தலைவர் கேஜிஎஸ்.ஷோபனா, துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், நகராட்சி ஆணையர்(பொ) கண்ணையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடுமலை ஒன்றியம்: உடுமலை ஒன்றியத்தில், எரிசனம்பட்டி, பெரியவாளவாடி, அமராவதி நகர் உள்ளிட்ட பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் மொத்தம் 110 மையங்கள், 5 நடமாடும் வாகனங்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில், சுமார் 16,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment