Monday, April 24, 2017
On Monday, April 24, 2017 by Unknown in Tiruppur
தாராபுரம்–கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.
அந்த காரில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 48 இருந்தன. இதையடுத்து காரை ஓட்டி வந்த மூலனூர் பகுதியை சேர்ந்த சதீஸ்குமாரை (வயது 32) பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் கொண்டு வந்தது போலி மதுபாட்டில்கள் என்பதும், அவற்றை தாராபுரம்–திருப்பூர் ரோட்டில் வேங்கிபாளையம் பகுதியில் விவசாயி பழனிசாமி தனது தென்னந்தோப்பில் நடத்தி வரும் போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.
455 லிட்டர் எரிசாராயம்
பின்னர் அவரை அழைத்துக்கொண்டு தென்னந்தோப்புக்கு போலீசார் சென்றனர். அங்கிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அதில் 2 பேர் மட்டும் போலீசில் சிக்கினார். அவர், செங்கப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் (35), வெள்ளகோவிலை சேர்ந்த செந்தில்வெங்கடேஷ் (35) என தெரியவந்தது.
உடனே போலீசார் தென்னந்தோப்பில் இருந்த ஒரு அறையை சோதனை செய்தனர். அப்போது, அங்கு 455 லிட்டர் எரிசாராயமும், 100 போலி
மதுபாட்டில்களும் இருந்தன. இதுதவிர காலி மதுபாட்டில்கள், அதற்குரிய மூடிகள், புதுச்சேரி மதுபான வகை லேபிள்கள், அசல் மதுபான பாட்டில் போல் ‘சீல்’ வைக்க கையால் இயக்கப்படும் எந்திரம் ஆகியவை இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
4 பேர் கைது
ரமேஷ் கொடுத்த தகவலின் பேரில், செங்கப்பள்ளியை அடுத்த காளிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 530 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவற்றை பதுக்கி வைக்க உதவிய அந்த தோட்ட காவலாளியான செங்கப்பள்ளியை சேர்ந்த ராமலிங்கத்தை (35) போலீசார் பிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தாராபுரம் மதுவிலக்குப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சதீஸ்குமார், ரமேஷ், செந்தில்வெங்கடேஷ், ராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய பழனிசாமி உள்ளிட்ட 4 பேரை தேடிவருகிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment