Monday, April 24, 2017
On Monday, April 24, 2017 by Unknown in Tiruppur
திருப்பூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 11–ந்தேதி பெண்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு வந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதில் பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து திருப்பூருக்குட்பட்ட பொதுமக்கள் நேற்று திருப்பூர் புதிய பஸ்நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் பழனிகுமார் தலைமை தாங்கினார். சட்டபஞ்சாயத்து இயக்க மாநில நிர்வாகி அண்ணாதுரை, லஞ்ச ஒழிப்பு கூட்டமைப்பு நிறுவனர் நாஞ்சில் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில், தடியடி சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும். தடியடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மதுபானக்கடைகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நிலங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இதில் முன் வைக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
0 comments:
Post a Comment