Monday, April 24, 2017
On Monday, April 24, 2017 by Unknown in Tiruppur
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து கட்சிகள் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அனைத்து தரப்பினரும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஏற்று தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும், வியாபார சங்கங்களும், அமைப்புகளும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
திரையரங்கு உரிமையாளர்கள் ஆதரவு
இந்த நிலையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் கூறியதாவது:–
உலகத்திற்கே உணவளிக்க கூடிய விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 41 நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தில் நாங்களும் பங்கேற்க உள்ளோம். அந்த வகையில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 169 திரையரங்குகளிலும் 2 காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி மற்றும் பகல் 2 மணி காட்சிகள் திரையிடப்பட மாட்டாது. மாலை காட்சியும், இரவு காட்சியும் வழக்கம் போல நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment