Tuesday, December 26, 2017
திருச்சி மண்ணச்சன்னல்லூர் நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பூமிநாதர் கோவிலுக்கு வாங்க
அப்படிப்பட்ட பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று நிலம்(மண்) தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாகக் கூறப்படும் திருச்சி மாவட்ட மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவில் மிகச்சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக பக்தர்களால் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
18ஆம் நுற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவிலுக்கு என்று ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. சிவனுக்கு என்று பல பெயர்கள் உண்டு, அதில் இங்கு எடுத்துள்ள அவதாரம் பூமிநாதன் என்ற அவதாரம் தான்.
அந்தகாசுரன் என்று சொல்லப்படும் ஒரு அரக்கன் தேவர்களுக்கு தொடர்ந்து பல தொல்லைகள் கொடுத்து வந்துள்ளான். அரக்கனின் தொல்லையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்த தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டுள்ளனர். தேவர்களின் கோரிக்கைக்கு இணங்கச் சிவபெருமான் அரக்கனை அழித்தபோது அவருடைய நெற்றியிலிருந்து ஒரு துளி வியர்வையைப் பூமியில் விழுந்து பூதமாக மாறியது. அந்தப் பூதம் யுத்த களத்தில் கிடந்த உடல்களை தின்று பசி அடங்காத பூதம் தன்னுடைய பசியை தீர்த்து வைக்க வேண்டும் என்று சிவபெருமானை நோக்கி தவம் இருந்தது. அதன் முன் தோன்றிய சிவபெருமான் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்று கூறியவுடன் இந்த மூன்று உலகங்களையும் அழிக்கும் திறன் எனக்கு வேண்டும் என்று கேட்டவுடன் சிவபெருமான் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் வரத்தை அளித்தார்.
தற்போது இந்தக் கோவிலில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக உள்ளார். பெரும்பாலான கோவில்களில் பைரவர் தெற்கு நோக்கி அமர்ந்தவாறு வடிவமைக்கப்பட்டிருக்கும், ஆனால் இந்தக் கோவிலில் மேற்கு பார்த்த திசையில் அமர்ந்திருக்கிறார்.
இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் வீடு கட்ட துவங்கும் முன்பும், நிலம் வாங்கும் முன்பு, நிலத்தில் வடகிழக்கு திசையில் இருந்து ஒருகைபிடி மண்ணை எடுத்து மஞ்சள் துணியில் கட்டி வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வாஸ்து நாள் அன்று பூமிநாதர் கோவிலுக்கு அந்த மண்ணை எடுத்து வந்து தன்னுடைய பெயரில் அர்ச்சனை செய்து, அந்த மண் முடிப்புடன் கருவறையை 36 முறை சுற்றிவந்து முகப்பு மண்டபத்தில் கட்டிவிட வேண்டும். வீடோ, கட்டிடமோ கட்ட துவங்கும் போது மீண்டும் மண்டபத்தில் கட்டிய மண் முடிப்பைக் கோவில் வளாகத்தில் உள்ள வில்வ மரத்தில் கொட்டிவிட்டு வன்னிய மரத்தின் கீழ் உள்ள மண்ணில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்துச் சென்று வடகிழக்கு மூலையில் போடுவதால் தங்கு தடையின்றி கட்டிட பணிகள் நிறைவடையும் என்று கூறுகின்றனர்.
மேலும் நிலம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் இருந்தாலும், அந்த நிலத்தில் இருந்து இடத்திற்கு சொந்தமான இரத்த உறவுகள் ஒருபிடி மண்ணுடன் இந்தக் கோவிலுக்கு வந்து பூஜை செய்தால் வழக்குகள் அவர்களுக்கு சாதகமாக அமையும் என்றும், அப்படிக் கொண்டு வரும் நிலம் தொடர்பான பிரச்சனையில் உண்மைத் தன்மை இல்லாமல் இருந்தால் சிவன் சொத்தை அடைய நினைத்தால் சர்வநாசம் என்று கூறுகின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலைத் தேடி திருச்சி மாவட்டம் மட்டுமின்றி சுற்று பகுதிகளில் கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, சேலம், மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேண்டுதல்களுடன் வந்து செல்கின்றனர். இன்றுவரை நிலம் தொடர்பான பிரச்சனைகள் இந்தக் கோவிலுக்கு வந்தவர்கள் சிவனின் அருளினால் நன்மையை மட்டுமே பெற்று சென்றுள்ளதாக கூறுகின்றனர்.
பேட்டி .....சிவத்தொண்டன்
பேட்டி .....சிவத்தொண்டன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
0 comments:
Post a Comment