Saturday, September 28, 2019
On Saturday, September 28, 2019 by Tamilnewstv in trichy reporter sabarinathan, திருச்சி சபரிநாதன் 9443086297
28.09.2019 சனிக்கிழமை
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தமிழரின் பாரம்பரிய தற்காப்புக்கலையான சிலம்பக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக மாநில அளவிலான சிலம்ப போட்டியை உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம் மற்றும் சுருளி ஆண்டவர் தற்காப்புக் கலைக்கூடம் இணைந்து நடத்தியது.
இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 400-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள், சிலம்ப பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியானது மழலையர் (2-ம் வகுப்புவரை), மினி சப்ஜூனியர் (3 முதல் 5ம் வகுப்புவரை), சப்ஜூனியர் (6 முதல் 8ம் வகுப்புவரை), ஜூனியர் (9 மற்றும் 10ம் வகுப்பு), சீனியர் (11 மற்றும் 12ம் வகுப்பு) மற்றும் சூப்பர் சீனியர் (கல்லூரி மாணவ மாணவியர்கள்) ஆகிய பல பிரிவுகளில் நடைபெற்றது.
இதில் குத்து வரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, இரட்டைக்கம்பு வீச்சு மற்றும் கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. மேலும் இப்போட்டியில் தேர்வாகியிருக்கும் சுகித்தா, சுஜீத், ஸ்ரீ மாலன் ஆகிய சிலம்ப வீரர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியில் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சர்வதேச சிலம்பப் போட்டிக்கு சிலம்பப் பயிற்சியாளர் திரு.அரவிந்த் மற்றும் சுருளி ஆண்டவர் சிலம்பக்கூடத் தலைவர் திரு.மோகன் ஆகியோர் அழைத்துச்செல்வர்.
இன்றைய போட்டிக்கு சிறப்பு விருந்தினராக டால்மியா சிமென்ட் வாழ்நாள் இயக்குனர் திரு. Er. N. கோபால்சுவாமி மற்றும் தலைவர் கி.ஆ.பெ. விசுவநாதம்பள்ளி டாக்டர்.V.ஜெயபால், அவர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களைப் பாராட்டி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்.
மேலும் இப்போட்டியை திரு. தமிழ்மகன் (எ) கண்ணன் (தலைவர், உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம்) அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
காலை 9:30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சுருளி ஆண்டவர் தற்காப்புக் கலைக்கூடத்தின் தலைவர் திரு. மோகன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.
இந்நிகழ்ச்சியை திருச்சி தில்லைநகரிலுள்ள சகுந்தலா மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாகத்தினர் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தமிழரின் பாரம்பரிய தற்காப்புக்கலையான சிலம்பக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக மாநில அளவிலான சிலம்ப போட்டியை உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம் மற்றும் சுருளி ஆண்டவர் தற்காப்புக் கலைக்கூடம் இணைந்து நடத்தியது.
இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 400-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள், சிலம்ப பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியானது மழலையர் (2-ம் வகுப்புவரை), மினி சப்ஜூனியர் (3 முதல் 5ம் வகுப்புவரை), சப்ஜூனியர் (6 முதல் 8ம் வகுப்புவரை), ஜூனியர் (9 மற்றும் 10ம் வகுப்பு), சீனியர் (11 மற்றும் 12ம் வகுப்பு) மற்றும் சூப்பர் சீனியர் (கல்லூரி மாணவ மாணவியர்கள்) ஆகிய பல பிரிவுகளில் நடைபெற்றது.
இதில் குத்து வரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, இரட்டைக்கம்பு வீச்சு மற்றும் கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. மேலும் இப்போட்டியில் தேர்வாகியிருக்கும் சுகித்தா, சுஜீத், ஸ்ரீ மாலன் ஆகிய சிலம்ப வீரர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியில் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சர்வதேச சிலம்பப் போட்டிக்கு சிலம்பப் பயிற்சியாளர் திரு.அரவிந்த் மற்றும் சுருளி ஆண்டவர் சிலம்பக்கூடத் தலைவர் திரு.மோகன் ஆகியோர் அழைத்துச்செல்வர்.
இன்றைய போட்டிக்கு சிறப்பு விருந்தினராக டால்மியா சிமென்ட் வாழ்நாள் இயக்குனர் திரு. Er. N. கோபால்சுவாமி மற்றும் தலைவர் கி.ஆ.பெ. விசுவநாதம்பள்ளி டாக்டர்.V.ஜெயபால், அவர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களைப் பாராட்டி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்.
மேலும் இப்போட்டியை திரு. தமிழ்மகன் (எ) கண்ணன் (தலைவர், உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம்) அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
காலை 9:30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சுருளி ஆண்டவர் தற்காப்புக் கலைக்கூடத்தின் தலைவர் திரு. மோகன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.
இந்நிகழ்ச்சியை திருச்சி தில்லைநகரிலுள்ள சகுந்தலா மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாகத்தினர் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...



0 comments:
Post a Comment