Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by Anonymous in ,    
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி 21–ந்தேதி மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:–
கர்நாடகா வழியே மேட்டூர் அணைக்கு 1934–ஆம் ஆண்டு முதல் 1974– ஆம் ஆண்டு வரை ஒரு ஆண்டுக்கு சராசரியாக 363.5 டி.எம்.சி. தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 2007– ஆம் ஆண்டு இறுதி தீர்ப்பில் இது 192 டி.எம்.சி.யாக குறைந்து விட்டது. 2013–ஆம் ஆண்டு நடுவர் மன்ற தீர்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால் இன்று வரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுக்கிறது.
எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தஞ்சை உள்பட காவிரி படுகை மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை காவிரி மீட்பு குழுவினர் முற்றுகையிடும் போராட்டம் வருகிற 21–ந்தேதி நடக்கிறது.

மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்திற்கு அனைத்து ஆதரவுகளையும் அளிப்பது எனவும், போராட்டத்தில் பங்கேற்க பொதுமக்களைதிரட்டுவது எனவும் கூட்டமைப்பின் தலைமை குழு முடிவெடுத் துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments: