Saturday, July 19, 2014
சென்னையிலிருந்து குவைத்திற்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் மெத்தாபெடாமைன் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குவைத் செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். ராஜேந்திரன் ஷேசாத்திரி என்பரின் பையை சோதனையிட்டபோது, அவரது பையில் 1.1 கிலோ ஹெராயினும், 1.02 கிலோ மெத்தாபெடாமைனும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராஜேந்திரனை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்பதும், இதில் தொடர்புடைய மேலும் 3 பேர் விமான நிலையத்திற்கு வெளியில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வெளியில் இருந்த முகமது இப்ராகிம், விஜயகுமார், முகமது ரபீக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்த ஒரு நபர், போதைப் பொருட்களை குவைத்தில் கொண்டு சேர்க்கும்படி கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். போதைப் பொருளை கொடுத்து அனுப்பிய கேரள நபர் மற்றும் குவைத்தில் உள்ள கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
காவல்துறைக்கு சவாலாக ELFIN சகோதரர்கள் புதுகை சத்தியமூர்த்தியின் அடுத்த வீடியோ. எல்ஃபின் கணக்குகள் முடக்கப்பட்டு இருந்தாலும் த...
-
ஸ்ரீரங்கத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம் பூலோக வைகுண்டம் என்று போற்றக்கூடிய 108 திவ்ய தேசங்களில் முதன்மையான அரு...
0 comments:
Post a Comment