Saturday, July 19, 2014

சென்னையிலிருந்து குவைத்திற்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் மெத்தாபெடாமைன் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குவைத் செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். ராஜேந்திரன் ஷேசாத்திரி என்பரின் பையை சோதனையிட்டபோது, அவரது பையில் 1.1 கிலோ ஹெராயினும், 1.02 கிலோ மெத்தாபெடாமைனும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராஜேந்திரனை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்பதும், இதில் தொடர்புடைய மேலும் 3 பேர் விமான நிலையத்திற்கு வெளியில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வெளியில் இருந்த முகமது இப்ராகிம், விஜயகுமார், முகமது ரபீக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்த ஒரு நபர், போதைப் பொருட்களை குவைத்தில் கொண்டு சேர்க்கும்படி கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். போதைப் பொருளை கொடுத்து அனுப்பிய கேரள நபர் மற்றும் குவைத்தில் உள்ள கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment