Showing posts with label Salem. Show all posts
Showing posts with label Salem. Show all posts
Saturday, July 19, 2014

சென்னையிலிருந்து குவைத்திற்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் மெத்தாபெடாமைன் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குவைத் செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். ராஜேந்திரன் ஷேசாத்திரி என்பரின் பையை சோதனையிட்டபோது, அவரது பையில் 1.1 கிலோ ஹெராயினும், 1.02 கிலோ மெத்தாபெடாமைனும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராஜேந்திரனை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்பதும், இதில் தொடர்புடைய மேலும் 3 பேர் விமான நிலையத்திற்கு வெளியில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வெளியில் இருந்த முகமது இப்ராகிம், விஜயகுமார், முகமது ரபீக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்த ஒரு நபர், போதைப் பொருட்களை குவைத்தில் கொண்டு சேர்க்கும்படி கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். போதைப் பொருளை கொடுத்து அனுப்பிய கேரள நபர் மற்றும் குவைத்தில் உள்ள கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...