Saturday, July 19, 2014

கோவை சின்னியம் பாளையம் விநாயகர் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 29). இவர்களுக்கு விஷ்ணுபிரியா (4) என்ற மகள் உள்ளார். நாகராஜ் தனது மனைவி மாரியம்மாள், அவரது தங்கை சுப்புலட்சுமி, அவரது கணவர் மாசாண முத்து ஆகியோரை அழைத்துக் கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அங்கு சுப்புலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிள் சின்னியம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது அந்த வழியாக வந்த கோவை – சேலம் அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதின.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் காயமடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மாரியம்மாளின் உறவினர்கள் அவரது சடலத்தை நடுரோட்டில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாரியம்மாளின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment