Saturday, July 19, 2014

கோவை சின்னியம் பாளையம் விநாயகர் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 29). இவர்களுக்கு விஷ்ணுபிரியா (4) என்ற மகள் உள்ளார். நாகராஜ் தனது மனைவி மாரியம்மாள், அவரது தங்கை சுப்புலட்சுமி, அவரது கணவர் மாசாண முத்து ஆகியோரை அழைத்துக் கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அங்கு சுப்புலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிள் சின்னியம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது அந்த வழியாக வந்த கோவை – சேலம் அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதின.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் காயமடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மாரியம்மாளின் உறவினர்கள் அவரது சடலத்தை நடுரோட்டில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாரியம்மாளின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment