Saturday, July 19, 2014

ஈரோடு சூரம்பட்டியில் உள்ள குமரன் வீதியை சேர்ந்தவர் சாந்தி. இவரது குடிசை வீட்டின் அருகே வரிசையாக குடிசை வீடுகள் உள்ளன. இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். இன்று காலை அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். இதில் சாந்தி வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
அவரது வீட்டில் பிடித்த தீ மள... மள...வென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சேதம் ஆனது. வீட்டில் இருந்த கட்டில், பீரோ, டேபிள் மற்றும் துணிமணிகள் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகி விட்டது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தீ விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு ஈரோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.
மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் சேதமதிப்பு உடனடியாக தெரிய வில்லை.
இந்த தீ விபத்து குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment