Monday, July 21, 2014
திருப்பூர், ஜூலை 21-
திருப்பூர் முருங்கப்பாளையம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை சார்பில் நடத்தப்பட்டு வரும் இலவச மாலை நேர வகுப்பு ஐந்தாண்டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
முருங்கம்பாளையம் வாலிபர் சங்க கிளை அலுவலகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக அப்பகுதியில் வாழும் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் வீட்டு குழந்தைகளுக்கு இலவச மாலை நேர வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜூலை மாதத்தில் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த மாலை நேர வகுப்பில், தற்போது 35 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இங்கு கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தீபா என்ற பட்டதாரி பெண், ஆசிரியையாக இருந்து இந்த வகுப்புகளில் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.
இது தவிர சனிக்கிழமை நாளில் விளையாட்டு, ஓவியம் போன்று பலவிதமான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பதிவேடு தயார் செய்து அதிக நாட்கள் வகுப்பிற்கு வருகை தரும் மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை இலவசமாக வழங்கப்படுகிறது.
முருங்கப்பாளையம் கிளை வாலிபர் சங்க தலைவர் அருள் பிரகாஷ் தலைமையில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆசிக், ரியாஸ், கோகுல் ஆகியோர் கண்காணித்து வகுப்பை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
இந்த ஐந்தாண்டு காலத்தில் இதுவரை சுமார் 175 பேர் இங்கு படித்து பயனடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்கள் சுமார் 15 பேர் அரசுப் பொதுத்தேர்வில் நானூறுக்கும் மேல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருப்பதுடன், இங்கு இதுவரை படித்த எந்தவொரு மாணவரும் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடைந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நூறு சதவிகிதம் வெற்றி பெற வைக்கும் வாலிபர் சங்கத்தின் இந்த மாலை நேர வகுப்புக்கு இந்த பகுதி மக்கள் நம்பிக்கையோடு தங்கள் குழந்தைகளை அனுப்பி வருகின்றனர். தொய்வின்றி இப்பணியை தொடர்ந்து கொண்டுசெல்வோம் என வாலிபர் சங்க ஊழியர்கள் நம்பிக்கையோடு தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
-
திருப்பூர் :குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திருப்பூரில் இன்று (24ம் தேத...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு ...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
-
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் ...
0 comments:
Post a Comment