Saturday, July 19, 2014

திருப்பூர் பெரியார் காலனி நேதாஜி நகரில் வசித்து வருபவர் நாகமணி (வயது33). இவரது கணவர் ரங்கசாமி. இவர்களுக்கு கலைவாணி (15) என்ற மகள் இருந்தார். கணவன்– மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் நாகமணி கணவர் ரங்கசாமியை விட்டு பிரிந்து தனது மகளுடன் திருப்பூரில் குடியேறினார்.
தனது மகள் தான் உலகம். அவளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். சமீபத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கலைவாணி 2 பாடங்களில் தோல்வியடைந்தார். இதனால் மன வேதனையில் இருந்தார். தாய் நாகமணி மகளுக்கு ஆறுதலும் தன்னம்பிக்கையும் கூறி வந்தார்.
இதனையடுத்து உடனடி தேர்வில் கலைவாணி தோல்வியடைந்த 2 பாடங்களையும் எழுதினார். தேர்வு முடிவு வெளியானது. அதிலும் அவர் தோல்வியடைந்தார். இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். இதை அறிந்த தாய் தொடர்ந்து மகளுக்கு ஆறுதல் கூறிவந்தார்.
இந்நிலையில் தோழிகள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் கலைவாணி அவமானத்தால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். நேற்று தாய் வேலைக்கு சென்ற பின்னர் கலைவாணி வீட்டில் இருந்த சாணிப்படரை குடித்தார். சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டது. தட்டுத்தடுமாறி நடந்து சென்று அருகில் உள்ளவர்களிடம் நான் விஷம் குடித்து விட்டேன். எனது அம்மாவிடம் கூறிவிடுங்கள் என்று கூறி மயங்கி விட்டார்.
அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவரது தாய் நாகமணிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள அவரது மாமாவிற்கும் தெரியப்படுத்தினர். 2 பேரும் அலறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். கலைவாணியை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணி பரிதாபமாக இறந்தார். கணவரை விட்டு பிரிந்து மகளே தனது உலகம் என்று வாழ்ந்த நாகமணி மகளின் உடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. தற்கொலை குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment