Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by Anonymous in , ,    
திருப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

திருப்பூர் மாவட்டம் அவினாசி பழங்கரை நல்லிக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 27). மோட்டாருக்கு காயில் கட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சென்னையில் நடந்த கோவில் நிகழ்ச்சிக்காக உறவினர் வீட்டுக்கு பிரபாகரன் குடும்பத்துடன் சென்றார். பின்னர் ஊர் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீராவில் வைத்திருந்த 2 பவுன் நகை, டி.வி.டி. மற்றும் 3 செல்போன்களை கொள்ளையர் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவினாசி போலீசில் பிரபாகரன் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்கள் தேடி வருகிறார்கள்.

0 comments: