Monday, July 21, 2014

On Monday, July 21, 2014 by Anonymous in ,    








முனைவர் க.தமிழமல்லன்

தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் அனைத்திந்திய அறவாணர் சாதனை விருதுக்குத் தேர்வு
நெல்லைமனோன்மணியம் பல்கலைக்கழக முன்னைத்துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் தலைமையில்  அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை எனும் அமைப்பு சென்னையில் இயங்கி வருகிறது. அந்த அறக்கட்டளை ஆண்டு தோறும் சிறந்த அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து அறவாணர் சாதனை விருதுகளை வழங்கி வருகிறது. அவ்விருது ஒரு பட்டயமும் பொன்னாடையும் பணமுடிப்பும் கொண்டதாகும். விருது பெற்றோரின் சிறப்புகள் சிறப்பிதழ் ஒன்றில் வெளியிடப்படும் நிலையும் உண்டு.
இவ்வாண்டு புதுச்சேரியைச் சேர்ந்த தனித்தமிழ்அறிஞர் முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர்க்கு வரும் 9.8.2014 காலையில் சென்னைத் தமிழ்க்கோட்டத்தில் நடைபெறும் விழாவில் அனைத்திந்திய அறவாணர் சாதனை விருது வழங்கப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துணைவேந்ர் முனைவர் மு.தங்கராசு முனைவர் க.தமிழமல்லன் அவர்களுக்கு விருது வழங்கி வாழ்த்துகிறார். விழாவில் சான்றோர் பலர் கலந்துகொள்கின்றனர்.
அன்புகூர்ந்து இச்செய்தியை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவண் த.தமிழ்த்தென்றல் தனித்தமிழ்இயக்கம்,புதுச்சேரி 605009 செல்பேசி 9791629979



முனைவர் க.தமிழமல்லன்
தன்குறிப்பு
1.பெயர்    க.தமிழமல்லன்  (வடமொழியிலிருந்த இயற் பெயரை முழுமையாக    மாற்றிக்கொண்டார்)
2.பிறந்த இடம் ;  தட்டாஞ்சாவடிபுதுச்சேரி 605 009
3.பெற்றோர்- திரு.பொ.கண்ணையன்திருவாட்டி க.தனலட்சுமி
4.கல்வி : முனைவர்,  க.மு.கல்.இ --எம்.ஏ. பி.ஏ ட்---
5.அலுவல் முதனிலைத் தமிழாசிரியர்
6.ஈடுபாடு கொண்ட இலக்கியத்துறைகள்        
1.பாடல்
2.சிறுகதை
3.பாவியம்
4.ஆராய்ச்சிக் கட்டுரைகள்
5.சிறுவர் இலக்கியம்
6.இதழியல்
7.உரைவரைதல்
8.இலக்கிய இயக்கங்கள் நடத்துதல்
9.மொழிநலப் போராட்டங்கள் நடத்துதல்
7. எழுதியுள்ள நால்கள   36 நுால்கள்
8. இலக்கியப்பணிப் பட்டறிவு ; 42 ஆண்டுகள்

9.நடத்துகின்ற மாத இதழ் ;  வெல்லும் துாயதமிழ்
10. தொடங்கிய ஆண்டு ; 1993

11.அயல்நாட்டுப் பயணம் ;     
முறை மலேசியா
முறை சிங்கப்பூர்
முறை இலங்கை
முறை தாய்லாந்து

12.வாழ்க்கைமுறை ;
ஒழுக்கமான வாழ்க்கைதீய பழக்கம் எதுவுமின்மைகடன்இன்மை. பொதுநலம்தமிழின நாட்டுரிமைக்காக எப்பணியும் செய்ய அணியமாயிருத்தல்.
முனைவர் க.தமிழமல்லன்    பெற்ற விருதுகள்
1.செந்தமிழ்ச் செம்மல்விருது:     குழித்தலை கா.சு நினைவு இலக்கியக்குழு10.7.90
2.
இலக்கியச் செம்மல்,                    கடலுார்த் தமிழியக்கம்                     28.7.1991
3.
செந்தமிழ்க்காவலர்பட்டயம் ,    தலைநகர்த் தமிழ்ச்சங்கம் 19.8.1994                                                            
4.பா(கவிதை)ப்போட்டியில்பரிசுதமிழ்ப்புதுவைஎன்னும் மாதஇதழ் நடத்தியபோட்டி  06.09.95.
1.        தமிழமல்லனின் மஞ்சளுக்கு வேலையில்லைஎனும்
2.        சிறுகதை நுாலுக்காகப் பாராட்டு  சென்னைப் புதுயுகம்  அமைப்பு               1997
3.        .தமிழ்மறவர் விருது தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்திச் சென்னையில் நாள்கள்சாகும்வரைபட்டினிப்போர்”  மேற்கொண்டதற்காகசென்னைதமிழ்ச்சான்றோர்பேரவை         25.4.1994
4.        .புதுவை எழுத்தாளர் சங்கப் பரிசு13.10.1999 
பாவாணரின் தமிழ்ப்பணி’ என்னும் நுாலுக்காக
5.        சிறுவர்இலக்கியச் சீர்மணி,சிறுவர் இலக்கியச்சிறகம்,,புதுச்சேரி21.04.2001
6.         பாராட்டுநேரு குழந்தை இலக்கியவிருது பெற்றதற்காகக்   குழந்தை எழுத்தாளர் சங்கம் 14.12.2001
7.        தமிழ்மணி விருது பாவாணர் இயல் பணிகளுக்காக 
கோவை பாரதியார் பல்கலைக்கழகம்    15.09.2001
8.        .புதுவைத் தமிழ்ச்சங்கம் பாராட்டுதமிழ்ச்சங்கப் பணிகளுக்காக15.12.2002               
9.        பாத்திறம், (பாடல்இயற்றும் திறம்)தமிழ்த் தொண்டுகளுக்குப் பாராட்டுவெற்றித்தமிழர் பேரவை,புதுச்சேரி   12.10.2003
10.     .சேலம் நாகப்பன் அறக்கட்டளை,அருஞ்செயலர் (சாதனையாளர்) விருதுதனித்தமிழ்ப் பணிகளுக்காக.
11.     தமிழ்இலக்கிய மாமணி விருது
பாவாணர்  பெருமை’ எனும்நுாலின் சிறப்புக்காக
உலகளாவிய உன்னத மானிடசேவைமையம்,சென்னை20.12.2003
12.     .பாவேந்தர் மரபுப் பாவலர் விருது    
சென்னைப் பாவேந்தர்பாசறை   29.04.2003
13.     மனோன்மணியம் சுந்தரனார் இலக்கிய விருது,தனித்தமிழ்க் காவலர்  பட்டம்
சங்கரதாசு சுவாமிகள் இயல்இசை நாடக சபா,  புதுச்சேரி 16.03.2003
14.     .பாவாணர் கொள்கை பரப்புநர் விருது 
முறம்புபாவாணர் கோட்டம் (விருதுநகர்) 07.02.2005
15.     திருவனந்தபுரம், -தமிழ்ச்சங்கம் பாராட்டு,10.7.2002-                           
16.     சேலம் தமிழ்மன்றம் பாராட்டு                        
17.     உலகத்திருக்குறள் மையம் ,திருக்குறள் பணிகளுக்காக, 21.11.2008
18.     குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக்கழகம்     
புதுச்சேரி. செம்பணிச் சிகரம், 16.8.2009
19.     முனைவர் பட்டம் பெற்றதற்காகப் பாராட்டுவிழா
நண்பர்கள் தோட்டம் புதுச்சேரி  19.3.2010                       
20.     புதுவைத் தமிழ்க்கலை மன்றம் பாவாணர் விருது
21.     தாரைப்புள்ளிக்காரர் சிறந்த நாலுக்கான விருது சேலம் தனித்தமிழில் பாவியங்கள் நாலுக்காக 19.2.2012
22.     சிகரம் விருது நாடகக் கலைச்சங்கம் புதுச்சேரி -20.3.2012
23.     வாழ்நாள் சாதனையாளர் விருது-மறுபக்கம் கிழமைஇதழ் 20.4.2012
24.     ஞானராசா மகிமைச்செல்வி விருது – தனித்தமிழில் பாவியங்கள் நாலுக்காக,மூவொரு அறக்கட்டளை 28.4.2012
முனைவர் க.தமிழமல்லன்    இலக்கிய அமைப்புகளின் வாயிலாக
முழுநேரமும் உழைத்து  ஆற்றிய பணிகள்

1.        புதுச்சேரி வில்லியனுார்ச் சாலைக்கு மறைமலையடிகள் சாலை என அரசை வற்புறுத்திப் பெயர் வைக்கச் செய்தது.
2. 
பெயர்ப்பலகைத் தமிழாக்க உத்தரவைப் போடுமாறு செய்தது.
3. 
பிறப்புச் சான்றிதழ்ப் படிவங்களில் மும்மொழி இருந்த நிலைமாற்றப்பட்டது. மீண்டும் அவ்வாறு இருக்குமாறு செய்தது.
4. 
புதுவைப் பல்கலைக்கழகம் மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர்க்கு ஒருநாள்விழா நடத்துமாறு செய்தது.
5. 
புதுச்சேரி அரசு தமிழ்வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி 41அமைப்புகள் கலந்துகொண்ட கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
6. 
இலங்கைத்தமிழர் படுகொலையைக் கண்டிக்கும் பல உண்ணாநோன்புகளை நடத்தியது.  மகளிர் உண்ணா நோன்பையும் நடத்தியது.
7. 
உலகின் முதல் தனித்தமிழ் இலக்கிய மாநாட்டை வெற்றியுடன் நடத்தியது. 1984
8. 
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியாகக் குறைக்கப்பட்டது. அதை மீண்டும் முழுமையாகப் பாடுமாறு செய்தது.
9. 
புலவர் கீரன்  தமிழ்வழிபாட்டு மொழியாகக் கூடாது என்று பேசியதைஎதிர்த்துப் போராடியது.
10. 
ம.பொ.சி தத்துவம் தமிழில் இல்லை என்று பேசியதைத் தனியராய்ச்  சென்று அவரைக் கண்டு பேசி எதிர்த்தது.
11. 
புதுச்சேரியின் ஆட்சிமொழி தமிழ் மட்டுமே ஐந்து மொழிகள் அல்ல என்பதை நிறுவ நுால்எழுதிக் கருத்தரங்கம் நடத்தியது.
12 .
புதுச்சேரி வானொலியில் ஆண்டுதோறும் மறைமலையடிகள். பாவாணர் ஆகிய தனித்தமிழ்;அறிஞர்களைப் பற்றிய சொற்பொழிவுகள் அவர்களின் பிறந்த நாள்களை முன்னிட்டு நிகழுமாறு செய்தது.
13. 
தமிழ்வழிக்கல்விக்காக தமிழ்நிலத்தில் முதன்முறையாக ஒரு பள்ளியை அமைத்து நடத்தியது.அதற்குத் தனித்தமிழ்க்கழகத் தொடக்கப்பள்ளி என்று பெயர் வைத்தது.
14. 
தமிழ்வழிக் கல்விக்காகச் சென்னையில் சாகும்வரை பட்டினிப்போரில்”  கலந்து கொண்டது.நாள்கள் பட்டினியாய் இருந்தது.
15. 
பத்துப் பாட்டுஎட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்கு ஆகிய கழக(சங்க) இலக்கியங்களுக்கு மாதந்தோறும் 60மாதங்கள் தொடர்சொற்பொழிவு நடத்தியது.
16. 
புதுச்சேரிப் பாவேந்தர்  சிலைப்பூங்கா பாழ்பட்டுக்கிடந்தது. அதைச் சீர் செய்யுமாறு போராடியது. அதன்பின் அரசு சரிசெய்தது.
17. 
தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கவேண்டும் என்னும் வேண்டுகோளை வலியுறுத்தித் துணைநிலை ஆளுநரிடம் நேரில் கண்டு அளித்துப் பேசியது
18. 
தமிழ்வளர்ச்சித் துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒருநாள் அடையாளப் பட்டினிப் போரை நடத்தியது.
19. 
புதுச்சேரி என்னும் பெயரை வைத்தபின் நகரப்பகுதிக்குப் பாண்டிச்சேரி என்று பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்பின் பழையபெயர் வைக்க ஏற்பாடு நடந்தது.
20. 
பல ஆண்டுகளாய்த் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்தி நேர்மையாய்ப் பரிசு வழங்கி வருதல்.
21. 
கடைகள் தோறும் சென்று பெயர்ப்பலகைத் தமிழாக்கப் பணியை 21 நாள்கள் செய்தது. அதன் விளைவாகக் கடைகளின் பெயர்ப்பலகைகள் தனித்தமிழில் மாற்றப்பட்டன.            
முனைவர் க.தமிழமல்லன் அவர்களை ஆய்வுக்கட்டுரை வழங்க அழைத்த நிறுவனங்கள்
1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பாவாணர்அறக்கட்டளைச் சொற்பொழிவு 2.நாள்கள்
2. 
புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைநடத்திய பல கருத்தரங்குகள்.
3. 
பெங்கலூர்த்தமிழ்ச்சங்கம் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு
4. 
அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் கருத்தரங்கு- புது தில்லி
5. 
புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
6. 
உலகத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகம்- - சென்னை
7. 
தலைநகர்த் தமிழ்ச்சங்கம் -- சென்னை
8. 
கா.சு நினைவு இலக்கியக்குழு - குழித்தலை
9. 
உலகத்தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் -- மலேசியா
செந்தமிழ்ச் சிலப்பதிகார மாநாடு 1999 கோலாலம்பூர்
10. 
பாவாணர் நுாற்றாண்டு விழாக் குழு மலேசியா
பாவாணர் நுாற்றாண்டு விழா -2002 மலேசியா - பாரிட்புந்தார்
11. 
புதுச்சேரி வானொலி
12. 
புதுவைத் தொலைக்காட்சி
13. 
பல இலக்கிய அமைப்புகள்
சிறப்பு நிகழ்ச்சி கதிர்த் தொலைக்காட்சி (சன் ) வணக்கம் தமிழகம் நேர்காணல்
சிறப்பு வெளிநாட்டு இலக்கியப் பயணங்கள்
1. 
சிங்கப்பூர்மலேசியா முறை
2. 
தாய்லாந்து
3. 
இலங்கை

நுால்களுக்காகக் க.தமிழமல்லன் பெற்ற சிறப்புகள்.
தனித்தமிழில் எழுதப்பெற்ற அவர் நுால்களுக்கு அரசின் பரிசுகளும் தனியாரின் பரிசுகளும் கிடைத்துள்ளன.
புதுச்சேரி அரசின் பரிசுகள்
பரிசுகள் நுால்கள் அரசுஅளித்தவை
1. 
பாவாணரின் தமிழ்ப்பணி கம்பன் புகழ்ப் பரிசு 1997
2.
 நிலாச்சீட்டு (சிறுவர்க்கான பாடல்தொகுப்பு)
நேரு குழந்தைகள் இலக்கிய விருது 1999                                                                                             3.கம்பன்புகழ் இலக்கியப் பரிசு 2002  பாமுகில் (பாடல் தொகுப்பு)
5. 
நல்லாசிரியர் விருது புதுச்சேரி அரசு 05.9.2006                            
அமைப்புகள் அளித்தவை
4. 
புதுவை எழுத்தாளர் சங்கப் பரிசு 13.10.199  பாவாணர் தமிழ்ப்பணி
5.பாவாணர் பெருமை நாலுக்கான விருது உன்னத மானிடச்சேவை மையம்,சென்னை                                      6.தனித்தமிழில் பாவியங்கள் நாலுக்குப்பரிசு சேலம் தாரைப்புள்ளிக்காரர் அறக்கட்டளை 19.2.2012சேலம்                                                                7.தனித்தமிழில் பாவியங்கள் நாலுக்கு ஞானராசா மகிமைச்செல்வி இலக்கிய விருது 28.4.2012                               8.அண்ணல் பாவியநாலுக்கு விருது கரூர் திருக்குறள்பேரவை 15.4.2012

முனைவர் க.தமிழமல்லன் மேற்கொண்ட சில பொதுப்பணிகள்

தட்டாஞ்சாவடியில் பாவாணர் நற்பணிமன்றம் அமைத்து நண்பர்கள் ஊர்மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களின் சிறப்பான ஒத்துழைப்புடன் பல நற்பணிகளைச் செய்துள்ளார்.

இரவுப்பள்ளி
தெருவிளக்குகள் எரியுமாறு செய்தல்
துப்புரவுப்பணி
சாலை புதுப்பித்தல்
விளையாட்டுப்போட்டி
பொதுக்கழிவறை அமைத்தல்
அறிஞர்களுக்கு விருது வழங்கல்
கோலப்போட்டி
கல்வியிலும் விளையாட்டிலும்
சிறந்த இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பரிசளித்தல்
எழுத்தாளர்கள் சுற்றுலா
இலவசப் பல் மருத்துவம்
இலவசப் பொதுமருத்துவம்

வெல்லும் துாயதமிழ்  
  20ஆண்டுகளாக முனைவர் க.தமிழமல்லன் நடத்தும் வெல்லும் துாயதமிழ்    நேர்மையான மாத இதழ் சில குறிப்புகள்
முகவரி 66,தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605 009ஆண்டுக்கட்டணம் உருவா 140.00 மட்டும் புரவலர் கட்டணம் 3500.00 உருவா வாழ்நாள் கட்டணம் 1500.00உருவா
இதழின்சிறப்புகள் :
அனைத்துப் படைப்புகளும் பிறசொற் கலவாத தனித்தமிழ்  இருத்தல்
எல்லாரும் சுவைத்துப் படிக்கத் தக்க எளியநடையில் இதழை வெளியிடுதல்
- 18 
ஆண்டுகளாக நேர;மையாகக் காலம் தவறாமல்  வெளியிடுதல்
தனித்தமிழ்ச் சிறுகதைகளையும் மாணவர்க்குரிய பயன்மிக்க செய்திகளையும் வெளியிடல்
ஆய்வுக்கட்டுரைகள் இலக்கணத்துடன் அமைந்த பாடல்கள் வெளியிடுதல்
ஆண்டுதோறும் தனித்தமிழ்ச்சிறுகதைப் போட்டி நடத்திப் பரிசளித்தல்
தொடங்கிய ஆண்டு,மாதம்: 1993 சூன் மாதம்
நோக்கம் : தனித்தமிழ்க் கொள்கை பரப்புதல்தனித்தமிழ் இலக்கியம்            வளர்த்தல்தனித்தமிழ் அன்பர்களைஒருங்கிணைத்தல்.நல்லதைப் பாராட்டல் அல்லதை எதிர்த்தல்.
வெளியிட்ட சிறப்புமலர்கள் : ஆண்டுதோறும் இரண்டு சிறப்பிதழ்கள்  வெளியிடுதல்  அவற்றுள் ஒன்று தனித்தமிழ்ச் சிறுகதைச் சிறப்பிதழ்
திருமணச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது,
பாவாணர் நுாற்றாண்டு விழாச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.
இதில் தொடர்ச்சியாகத் தனித்தமிழ்ச் சொற்களஞ்சியம்கலைச்சொற்கள்    முதலியவை வெளியிடப்பட்டு வருகின்றன.
வெளிவந்துள்ள மொத்த இதழ்கள் : 252இதழ்கள்
உறுப்பினரஎண்ணிக்கை : 700
பொருள்(நிதி) அடிப்படை: சொந்தப் பணம்
சிறப்பு ஆசிரியர் முனைவர்  க.தமிழமல்லன்,
முதனிலைத் தமிழாசிரியர : (அரசுப்பள்ளி)  
ஆசிரியர்  த.தமிழ்ச்செல்வி (தமிழமல்லன் துணைவியார்)
வெல்லும் துாயதமிழ் வெளியிட்ட செய்தி அடிப்படையில் பல பொதுநலப்பணிகள் நடைபெற்றுள்ளன.
1.
பொதுஅறிவுத் தேர்வுக்கு நம் இதழின் மாணவர்பக்கம் பயன்பட்டுள்ளது.
இதில் வெளிவந்த திருக்குறள் தமிழமல்லன் உரை,பாடல்கள்மற்றவர்கள் எழுதிய புதுச்சேரிப் பொதுஅறிவு,பாவாணர் கும்மி,ஒரு தாயின் தொண்டு முதலியன நுால்வடிவில் வெளிவந்துள்ளன.
2.
இவ்விதழைப் படித்துத் தங்கள் மொழிநடைபெயர்பட்டம் போன்றவற்றைத் துாயதமிழில் மாற்றிக் கொண்டவர்பலர்.
3.
இவ்விதழ்வெளியிட்ட தமிழமல்லன் பாடல் சிலபல படிகளாக எடுக்கப்பட்டு மக்களிடம் பரப்பப்பட்டுள்ளன.
4.
பெண்அழைப்பு வேண்டாத வழக்கம் என்னும் பொருளில் வெளிவந்த தமிழமல்லன் பாடல் ஒரு திருமணத்தில் செயற்படுத்தப்பட்டது.
5.
இதில் வெளிவந்த இன்னொரு பாடல் திலாசுப்பேட்டையில் கேடான முறையில் போடப்பட்ட சாலை பொ.ப.து.வால் சரி செய்யப்பட்டது.
வெல்லும் துாயதமிழ் சிறந்த சிற்றிதழ் என்னும் சான்றிதழும் பரிசும் சிற்றிதழ்க் காப்பாளர்  திரு. பொள்ளாச்சி நசன் அவர்களால் தரப்பெற்றது.
தொடங்கும் போதே பதிவெண்ணுடனும் அஞ்சல் சலுகை பெற்றும் வெல்லும்துாய தமிழ் முறையாக வெளிவந்தது

0 comments: