Thursday, July 24, 2014
On Thursday, July 24, 2014 by Anonymous in News
சிம்பு கதாநாயகனாக அறிமுகமான படம் – காதல் அழிவதில்லை. டி.ராஜேந்தர் இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. காதல் அழிவதில்லை படத்தைத் தொடர்ந்து ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு என சில படங்களில் நடித்தார்.
இப்படங்களுக்குப் பிறகு சார்மிக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்பு வரவில்லை. எனவே வேறு வழி இல்லாமல் தெலுங்குப் பக்கம் போனார் சார்மி. அங்கே அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக பல படங்களிலும் நடித்து சில வருடங்களுக்கு முன்பு வரை நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக இருந்தார்.
பிறகு மார்க்கெட் இழந்த சார்மி, சின்ன பட்ஜெட் படங்களில் நடிப்பது, ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுவது, கன்னடப் படங்களில் நடிப்பது என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், கங்கணா ரணாவத் நடித்து ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன ‘குயின்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் சார்மி. குயின் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீ-மேக் செய்யப்பட உள்ளது. நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் இப்படத்தின் ரீ-மேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார்.
‘குயின்’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்க த்ரிஷா, நயன்தாரா உட்பட பல முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் தியாகராஜன். அவர்கள் கேட்ட சம்பளம் அதிகமாக இருந்ததாலும், அவர்களிடம் குறிப்பிட்ட நாட்கள் தொடர்ந்து டேட்ஸ் இல்லாததாலும் நடிகை சார்மியை அணுகி உள்ளனர்.
குயின் ரீமேக்கில் சார்மி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். சார்மி தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பிரபலமான நடிகை என்பதால் மூன்று மொழிகளிலும் அவரையே நடிக்க வைக்க இருக்கிறார்களாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment