Thursday, July 24, 2014
On Thursday, July 24, 2014 by Anonymous in News
ஆயிரம் கைகள் தடுத்தாலும் ஆதவன் மறைவதில்லை, என்ற வார்த்தைக்கு நிகராக சினிமா உலகத்தில் ஆயிரம் தடைகளை தாண்டி சுட்டெரிக்கும் சூரியனாக நேருக்கு நேரில் அறிமுகமானார் சூர்யா. அன்றிலிருந்து இன்று வரை ஒளி மங்காமல் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பல பேர், பல கருத்துகளை இவர் மீது திணித்தாலும் தனக்கு என்ன வருமோ, அதை மட்டும் செய்துக் கொண்டிருந்த இந்த வெற்றிக்குதிரையில் கடிவாளத்தை அவிழ்த்து எறிந்தவர் இயக்குனர் பாலா. இவரின் பார்வை நந்தாவாக சூர்யா மீது விழுந்ததால் தான், இவரின் திரைப்பயணம் அடுத்தக்கட்டத்திற்கு சென்றது, ரசிகர் பலமும் அதிகமாகியது.இந்த ரசிகர் படை இன்றும் குறையாமல் இவருக்கு ஆதரவாக சிங்கமாக கர்ஜித்துக் கொண்டிருக்கின்றனர். எதற்கும் அஞ்சாதவானாக, தமிழ் திரையுலகில் வாரணம் ஆயிரம் சூடி, இன்று முடி சூட மன்னனாக திகழ்கிறார்.சினிமா நடிகன் என்றாலே கூத்து, கும்மாளம் என்று சொல்லப்படும் இந்த சமுதாயத்தில் , தனக்கென்று ஒரு குறுகிய வட்டம் அமைத்து அதில் ஒழுக்கமாக வாழும் நடிகர்களுக்கெல்லாம் இவர் ஒரு முன்னோடி. தான் சம்பாதிக்கும் பணத்தை தேவையில்லாத ஆடம்பர செலவு செய்யாமல் நாளை ‘சிகரம்’ தொடும் என்னும் இளைஞர்களின் எண்ணங்களை ‘அகரம்’ வாயிலாக நிகழ்த்திக்காட்டியவர்.யாருக்கும் புரியாத ‘பிதாமகனாக’ இருந்த இவரின் வாழ்க்கையில் சில்லென்று தோன்றியது ஜோதிகாவுடன் காதல், இந்த காதல் பின் திருமணமாகி இன்று குடும்ப வாழ்க்கையிலும் மிஸ்டர்.பெர்ஃபெக்ட்டாக இருந்து வருகிறார்.ஆறு போல் இன்னல்கள் வந்தாலும் அஞ்சானாக அதை வென்று எட்டாத உயரத்தில் இருக்கும் சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில் ‘சினி உலகம்’ பெருமையடைகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment