Monday, August 25, 2014
On Monday, August 25, 2014 by Unknown in Break
கான்பூர்,
பள்ளியில் ஆடையை அவிழ்த்து ஆசிரியை தண்டித்ததால் 12 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பள்ளிக்கு செல்போன்
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் நஜியாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தார். பள்ளிக்கு வந்தபோது சிறுமியின் புத்தகப் பையினை பள்ளி ஆசிரியை சோதனை செய்தார்.
அப்போது மாணவியின் பையில் இருந்து ஆசிரியை செல்போன் ஒன்றை கண்டுபிடித்தார். பள்ளிக்கு மாணவி செல்போன் கொண்டு வந்ததால் கடும் ஆத்திரம் அடைந்த ஆசிரியை அவரை திட்டியுள்ளார். பலமாக அடித்துள்ளார்.
ஆடையை அவிழ்த்து தண்டனை
பின்னர் ஆசிரியை சிறுமியின் ஆடையை அவிழ்த்து தண்டனை கொடுத்துள்ளார். மாணவியின் ஆடைகளை அவிழ்த்து சுமார் 2 மணி நேரம் வகுப்பறையில் அப்படியே நிற்க வைத்து தண்டித்துள்ளார்.
இதனால் பெரும் அவமானம் அடைந்த மாணவி சோகமாக வீடு திரும்பினார்.
மாணவி தற்கொலை
மனவேதனை அடைந்த மாணவி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவியின் இறப்புக்கான காரணத்தை அறிந்து கொண்ட உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாணவியை தண்டித்த ஆசிரியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர். உடனடியாக போலீஸ் எஸ்.பி. எம்.பி. வர்மா சம்பவ இடத்திற்கு சென்றார். பின்னர் பெற்றோர்களிடம் புகாரை பெற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதற்கிடையே மாணவியை தண்டித்த ஆசிரியை தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆசிரியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment