Monday, August 25, 2014
On Monday, August 25, 2014 by Unknown in Break
கான்பூர்,
பள்ளியில் ஆடையை அவிழ்த்து ஆசிரியை தண்டித்ததால் 12 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பள்ளிக்கு செல்போன்
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் நஜியாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தார். பள்ளிக்கு வந்தபோது சிறுமியின் புத்தகப் பையினை பள்ளி ஆசிரியை சோதனை செய்தார்.
அப்போது மாணவியின் பையில் இருந்து ஆசிரியை செல்போன் ஒன்றை கண்டுபிடித்தார். பள்ளிக்கு மாணவி செல்போன் கொண்டு வந்ததால் கடும் ஆத்திரம் அடைந்த ஆசிரியை அவரை திட்டியுள்ளார். பலமாக அடித்துள்ளார்.
ஆடையை அவிழ்த்து தண்டனை
பின்னர் ஆசிரியை சிறுமியின் ஆடையை அவிழ்த்து தண்டனை கொடுத்துள்ளார். மாணவியின் ஆடைகளை அவிழ்த்து சுமார் 2 மணி நேரம் வகுப்பறையில் அப்படியே நிற்க வைத்து தண்டித்துள்ளார்.
இதனால் பெரும் அவமானம் அடைந்த மாணவி சோகமாக வீடு திரும்பினார்.
மாணவி தற்கொலை
மனவேதனை அடைந்த மாணவி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவியின் இறப்புக்கான காரணத்தை அறிந்து கொண்ட உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாணவியை தண்டித்த ஆசிரியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர். உடனடியாக போலீஸ் எஸ்.பி. எம்.பி. வர்மா சம்பவ இடத்திற்கு சென்றார். பின்னர் பெற்றோர்களிடம் புகாரை பெற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதற்கிடையே மாணவியை தண்டித்த ஆசிரியை தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆசிரியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment