Saturday, August 30, 2014
திருச்சி தொழில் அதிபரிடம் கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 34). இவர் சொந்தமாக வீடுகளுக்கு உள்அலங்கார வேலை செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். தனது தொழிலை விரிவுபடுத்த இவருக்கு ரூ.20 லட்சம் தேவைப்பட்டது. இதற்காக திருச்சியை சேர்ந்த பரமேஸ்வரி என்பவரை கோபாலகிருஷ்ணன் அணுகினார்.
அவர், திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த கருணாகரன்(60) என்பவர் மூலம், திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த சாமிநாதனின் மனைவி சிவகாமியை(62) அறிமுகம் செய்துவைத்தார். அப்போது, அவர் மகளிர் சுயஉதவி குழு மூலம் ரூ.20 லட்சம் கடன் வாங்கி தரவேண்டும் என்றால் ரூ.3 லட்சம் கமிஷனாக வழங்கவேண்டும் என்று கூறினார். இதை நம்பிய கோபாலகிருஷ்ணன், ரூ.3 லட்சத்தை பரமேஸ்வரி, கருணாகரன், தங்கவேல், சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் சிவகாமியிடம் கொடுத்தார்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் கோபாலகிருஷ்ணனுக்கு அவர்கள் கடன் பெற்று தரவில்லை எனத்தெரிகிறது. இதுகுறித்து அவர் சிவகாமியிடம் கேட்டபோது, ‘கடன் பெற்று தரமுடியாது. கொடுத்த பணத்தை கேட்டு வந்தால் கொலை செய்து விடுவேன்’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் இதுபற்றி திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார்.
அதன்பேரில் சிவகாமி, பரமேஸ்வரி, கருணாகரன், தங்கவேல், சாமிநாதன் ஆகிய 5 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தார். விசாரணையில் கோபாலகிருஷ்ணன் தவிர மேலும் 4 பேரிடம் இதுபோல் தலா ரூ.3 லட்சம் என்று மொத்தம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிவகாமி, கருணாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த மோசடி தொடர்பாக தலைமறைவாக உள்ள பரமேஸ்வரி, தங்கவேல், சாமிநாதன் ஆகிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment