Saturday, August 30, 2014
ஊத்துக்குளியில் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் குத்தி டிரைவர் படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் மகேஷ்குமார் (வயது 35), இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். குன்னத்தூர் சத்தியாநகரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ராஜா (35). இவர் வெல்டிங் தொழில்
ஊத்துக்குளி ரெயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் நேற்று மதியம் மகேஷ்குமார், ராஜா ஆகிய இருவரும் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்ட தாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜா மது பாட்டிலை எடுத்து உடைத்து மகேஷ்குமாரின் கழுத்தில் குத்தினார். இதில் மகேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் செல்வதங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜாவை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இறந்து போன மகேஷ்குமாருக்கு பிரியா (28) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment