Saturday, August 30, 2014
ஊத்துக்குளியில் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் குத்தி டிரைவர் படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் மகேஷ்குமார் (வயது 35), இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். குன்னத்தூர் சத்தியாநகரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ராஜா (35). இவர் வெல்டிங் தொழில்
ஊத்துக்குளி ரெயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் நேற்று மதியம் மகேஷ்குமார், ராஜா ஆகிய இருவரும் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்ட தாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜா மது பாட்டிலை எடுத்து உடைத்து மகேஷ்குமாரின் கழுத்தில் குத்தினார். இதில் மகேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் செல்வதங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜாவை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இறந்து போன மகேஷ்குமாருக்கு பிரியா (28) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment