Saturday, August 30, 2014
கோவை அருகே இளம்பெண்ணை கொலை செய்து, பிணத்தை கிணற்றில் வீசிய கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது–
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காசிக்கவுண்டன் புதூரில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் கடந்த 23–ந்தேதி 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கினர்.
இந்த நிலையில் பல்லடம் வதம்பச்சேரியை சேர்ந்த லிங்க மூர்த்தி என்பவரின் மகள் சவுந்தர்யாவை காணவில்லை என்று பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்ட விவரம் சூலூர் போலீசாருக்கு தெரியவந்தது. எனவே கிணற்றில் பிணமாக கிடந்தது சவுந்தர்யாவாக இருக்கலாம் என்று சூலூர் போலீசார் சந்தேகித்தனர். எனவே அவர்கள் லிங்க மூர்த்திக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அவர்களிடம் கிணற்றில் வீசப்பட்ட பெண்ணின் உடலை காட்டினர். அப்போது அவர் தனது மகளின் உடல்தான் அது என்று கூறி கதறி துடித்தார்.
இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், சவுந்தர்யா எப்படி இறந்தார்? கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து பல கோணங்களில் விசாரித்தனர். இந்தநிலையில் பிரேத பரிசோதனையில் சவுந்தர்யாவை கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை செய்தது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது குறித்து போலீசாரின் விசாரணை இன்னொரு கோணத்தில் சென்றது. இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:–
சவுந்தர்யா கடந்த 17–ந்தேதி பல்லடத்தில் இருந்து சேலத்துக்கு பஸ்சில் சென்றுள்ளார். பின்னர் சேலத்தில் இருந்து கோவைக்கும், பின்னர் கோவையில் இருந்து பல்லடத்துக்கும் பஸ்சில் வந்துள்ளார். அதன் பின்னர் தான் அவர் மாயமாகி உள்ளார். எனவே அவர் வந்த பஸ் டிரைவர், கண்டக்டர்களிடம் விசாரித்தால் தகவல் கிடைக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் குறிப்பிட்ட ஒரு பஸ்சில் அவர் அடிக்கடி பயணம்செய்தது தெரியவந்தது. அந்த பஸ் டிரைவரிடம்விசாரித்தபோது சவுந்தர்யா வழக்கமாக எங்கள் பஸ்சில்தான் வந்து காரணம் பேட்டையில் இறங்குவார். பின்னர் அவர் சத்தியமங்கலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் தனியார் பஸ்சில் செல்வது வழக்கம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த பஸ்சின் கண்டக்டரான மோகன்ராஜ் (வயது 31) என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவரிடம் துருவித்துருவி விசாரித்தனர். அதில் சவுந்தர்யாவுக்கும் மோகன்ராஜூக்கும் கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது தெரியவந்தது. மோகன் ராஜூக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை உள்ளது. ஆனால் இதை சவுந்தர்யாவிடம் மறைத்துவிட்டார். இந்த நிலையில் சவுந்தர்யாவும், மோகன்ராஜூம் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
சம்பவத்தன்று சேலத்தில் இருந்து பல்லடத்துக்கு சவுந்தர்யா பஸ்சில் வந்து இறங்கியதும், மோகன்ராஜை வழக்கம்போல் செல்போனில் அழைத்துள்ளார். அங்குவந்த மோன்ராஜூம், சவுந்தர்யாவும் சேர்ந்து அருகில் உள்ள காசிக்கவுண்டன் புதூர் சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள ஒரு தோட்டத்தில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது சவுந்தர்யா, இனி எத்தனை காலம் இப்படி நாம் தனிமையில் சந்திப்பது, என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள். சேர்ந்து வாழலாம் என்று கூறி உள்ளார். ஆனால் ஏற்கனவே திருமணமான மோகன்ராஜூக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் விடாமல் சவுந்தர்யா தொடர்ந்து அவரிடம் வற்புறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த மோகன்ராஜ், சவுந்தர்யாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் அவரது உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு மாயமானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மோன்ராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment