Saturday, August 30, 2014
ளஸ்-2 பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் துறை கோவை மண்டல துணை இயக்குனர் ஜோ.லூர்து சகாயராணி அறிவித்து உள்ளார்
தனித்தேர்வர்களுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தனித்தேர்வர்களிடம் இருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அப்போது விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தட்கல் முறையில் (சிறப்பு அனுமதி திட்டம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தனியார் இணையதள மையங்களில் விண்ணப்பிக்க முடியாது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக அரசு தேர்வுகள் துறை சார்பில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் விவரம் ஷ்ஷ்ஷ்.௴ஸீபீரீமீ.வீஸீ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தனித்தேர்வர்கள் சிறப்பு மையங்களுக்கு சென்று வருகிற செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் பற்றிய விவரங்கள் பதிவு சீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் தட்கல் கட்டணமாக ரூ.1,000, பதிவு கட்டணமாக ரூ.50 ஆகியவற்றை சிறப்பு மையங்களில் செலுத்த வேண்டும்.
தனித்தேர்வர்களுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தனித்தேர்வர்களிடம் இருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அப்போது விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தட்கல் முறையில் (சிறப்பு அனுமதி திட்டம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தனியார் இணையதள மையங்களில் விண்ணப்பிக்க முடியாது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக அரசு தேர்வுகள் துறை சார்பில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் விவரம் ஷ்ஷ்ஷ்.௴ஸீபீரீமீ.வீஸீ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தனித்தேர்வர்கள் சிறப்பு மையங்களுக்கு சென்று வருகிற செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் பற்றிய விவரங்கள் பதிவு சீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் தட்கல் கட்டணமாக ரூ.1,000, பதிவு கட்டணமாக ரூ.50 ஆகியவற்றை சிறப்பு மையங்களில் செலுத்த வேண்டும்.
தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதியதற்கான மதிப்பெண் சான்றிதழ் நகல், பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்ற தகுதி சான்றிதழ் (பள்ளியில் படிக்கும் பொதுத்தேர்வு எழுத தவறவிட்டவர்கள் மட்டும்), செய்முறை மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். நேரடி தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், வெளிமாநிலத்தவர்களாக இருந்தால் இடப்பெயர்வு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment