Saturday, August 30, 2014
ளஸ்-2 பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் துறை கோவை மண்டல துணை இயக்குனர் ஜோ.லூர்து சகாயராணி அறிவித்து உள்ளார்
தனித்தேர்வர்களுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தனித்தேர்வர்களிடம் இருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அப்போது விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தட்கல் முறையில் (சிறப்பு அனுமதி திட்டம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தனியார் இணையதள மையங்களில் விண்ணப்பிக்க முடியாது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக அரசு தேர்வுகள் துறை சார்பில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் விவரம் ஷ்ஷ்ஷ்.௴ஸீபீரீமீ.வீஸீ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தனித்தேர்வர்கள் சிறப்பு மையங்களுக்கு சென்று வருகிற செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் பற்றிய விவரங்கள் பதிவு சீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் தட்கல் கட்டணமாக ரூ.1,000, பதிவு கட்டணமாக ரூ.50 ஆகியவற்றை சிறப்பு மையங்களில் செலுத்த வேண்டும்.
தனித்தேர்வர்களுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தனித்தேர்வர்களிடம் இருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அப்போது விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தட்கல் முறையில் (சிறப்பு அனுமதி திட்டம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தனியார் இணையதள மையங்களில் விண்ணப்பிக்க முடியாது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக அரசு தேர்வுகள் துறை சார்பில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் விவரம் ஷ்ஷ்ஷ்.௴ஸீபீரீமீ.வீஸீ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தனித்தேர்வர்கள் சிறப்பு மையங்களுக்கு சென்று வருகிற செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் பற்றிய விவரங்கள் பதிவு சீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் தட்கல் கட்டணமாக ரூ.1,000, பதிவு கட்டணமாக ரூ.50 ஆகியவற்றை சிறப்பு மையங்களில் செலுத்த வேண்டும்.
தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதியதற்கான மதிப்பெண் சான்றிதழ் நகல், பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்ற தகுதி சான்றிதழ் (பள்ளியில் படிக்கும் பொதுத்தேர்வு எழுத தவறவிட்டவர்கள் மட்டும்), செய்முறை மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். நேரடி தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், வெளிமாநிலத்தவர்களாக இருந்தால் இடப்பெயர்வு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment