Sunday, August 03, 2014

சென்னை எம்.ஜி.ஆர். முருகேசன் தெருவை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது38). தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவரது மனைவி ரேவதி (35). வீடு வீடாக சென்று துணி மணிகள், அழகு சாதன பொருட்கள் விற்று வருகிறார். இவர்களது மகள்கள் ரோஸ்மாலினி (10), ஹரிணி (8).
நேற்று அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் சுந்தரேசன் குடும்பத்துடன் பங்கேற்றார். பின்னர் வீட்டுக்கு சென்ற அவர் குடும்பத்துடன் மாயமாகி விட்டார்.
இந்த நிலையில் சுந்தரேசன் கொடுத்த மொய் கவரை உறவினர்கள் பிரித்தனர். அதில் பணம் இல்லை. ஒரு கடிதம் மட்டுமே இருந்தது. அந்த கடிதத்தில், நான் அதே பகுதியில் அழகு கலை நிபுணராக உள்ள ஒரு பெண்ணிடம் கந்து வட்டிக்கு ரூ.2 லட்சம் பணம் வாங்கினேன். அந்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன். ஆனால் அந்த பெண் மேலும் பணம் தர வேண்டும் என்று மிரட்டி வருகிறார். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்யப் போகிறேன்’’ என்று எழுதப்பட்டு இருந்தது.
இந்த கடிதம் பற்றி எம்.ஜி.ஆர். நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் ரேவதியின் அண்ணன் துரைமுருகனிடம் உறவினர் தெரிவித்தார். அவர் அந்த கடிதத்துடன் நேற்று மாலை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது புகாரை அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் கொடுக்குமாறு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து துரை முருகன் அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியிடம் புகார் செய்தார். அவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதி வைத்திருந்ததால் முதலில் சுந்தரேசனின் வீட்டு பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சோதனை நடத்தினார்கள். அங்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று வந்த ஆடைகளை கழற்றி வைத்துவிட்டு வேறு உடை அணிந்து 4 பேரும் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
உடனே போலீசார் கந்து வட்டிக்கு பணம் கொடுத்த அழகு கலை நிபுணர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அவரும் வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து சுந்தரேசனையும், அவரது குடும்பத்தினரையும் கண்டு பிடிக்க உதவி கமிஷனர் அசோக்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்து நேற்று 2-வது நாளாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தினார். அப்போது, தங்கள் விள...
-
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போ கவும் மாட்டார்கள். சிங்களவர்க...
-
இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா பிரயாண அனுமதி எடுக்க வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள...
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் திருவா...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் திருச்சி தொகுதிக்கு உட்பட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து வருக...
-
செவ்வாய் கிரகத்தில் பல நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறு உள்ளனவா? என தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று...
-
தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்று எழுதப்பட்டிருந்தது . ஜெ.ஜோசப் .மாவட்ட செயலாளர் ...
0 comments:
Post a Comment