Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by Unknown in , ,



திருப்பூர்  ஆக 9:    திருப்பூர்  மாநகர  காவல்  ஆணையகரகம்  தோற்றுவிக்கப்படும்  முன்பு   வரை  ஏராளமான  வழிப்பறி , திருட்டு  கொள்ளை  போன்ற  குற்ற  சம்பவங்கள்  அதிகமாக  இருந்தன .  அப்போது  போலீஸ்  பற்றாக்குறை  இருந்ததே  காரணமாகும் . திருப்பூர்  மாநகருக்கு என்று   தனியாக  போலீஸ்  கமிஷ்னர்   2 துணை  கமிஷ்னர்கள் 4 உதவி  கமிஷ்னர்கள் மற்றும்  1000 க்கும்  மேற்ப்பட்ட  போலீசார்  நியமிக்கப்பட்டனர் . இந்நிலையில்  குற்ற  சம்பவங்களை  முற்றிலும்  ஒழிப்பதற்காக  மாநகர  போலீஸ்  துறையுடன்  ஸ்ரீபுரம்  அறக்கட்டளை  அமைப்பு  கைகோர்த்து  உள்ளது .  இதை  தொடர்ந்து  போலீஸ்  கமிஷ்னர்  சேஷசாய்   நிருபர்களிடம்  கூறும்போது   1600 இடங்களில்    கண்காணிப்பு  கேமரா பொறுத்த  திட்டமிட்டுள்ளோம் .  இதற்காக  ஸ்ரீபுரம்  அறக்கட்டளை பொதுமக்கள்  பங்களிப்புடன்  நிதி  திரட்டி  வருகிறது . முதற்கட்டமாக  செரீப்  காலனியில் 55 கேமரா  பொருத்தப்படும்  இதன்  கட்டுப்பாடு  முழுவதும்   மாநகர  போலீஸ் கட்டுப்பாட்டு  அறையில்  கேமரா  இருக்கும் .  பராமரிப்பு  பணிகளை  மட்டும்  ஸ்ரீபுரம்  அறக்கட்டளை  மேற்கொள்ளும் . மாநகர  பகுதியில்  அணைத்து  நிறுவனங்களிலும்  கண்காணிப்பு  கேமரா   கட்டாயம்  பொருத்தப்பட  வேண்டும் . இதற்காக  இதற்காக  தனி  அரசானை  உள்ளது .  கண்காணிப்பு  கேமரா பொருத்தாத  நிறுவனங்களில்  உரிமத்தை  ரத்து  செய்து  அவற்றை  சீல்  வைக்க  மாநகராட்சி  ஆணையருக்கு  அதிகாரம்  உள்ளது . என்றார் .  இந்த  நிகழ்ச்சியில் போது  சி ஐ ஐ  அமைப்பின்  தலைவர்  ராஜா  சண்முகம் ,  காவல்  ஆய்வாளர்கள்   முரளி  [நுண்ணறிவு பிரிவு ]  நெல்சன் [திருப்பூர்  தெற்கு ]  ஸ்ரீபுரம்  அறக்கட்டளை  நிர்வாகிகள்  விஜயகுமார் , ஆம்ஸ்ட்ராங்  பழனிச்சாமி , சிவா  உள்பட  பலர்  கலந்து  கொண்டனர் .