Saturday, August 09, 2014
திருப்பூர் ஆக 9: திருப்பூர் மாநகர காவல் ஆணையகரகம் தோற்றுவிக்கப்படும் முன்பு வரை ஏராளமான வழிப்பறி , திருட்டு கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகமாக இருந்தன . அப்போது போலீஸ் பற்றாக்குறை இருந்ததே காரணமாகும் . திருப்பூர் மாநகருக்கு என்று தனியாக போலீஸ் கமிஷ்னர் 2 துணை கமிஷ்னர்கள் 4 உதவி கமிஷ்னர்கள் மற்றும் 1000 க்கும் மேற்ப்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டனர் . இந்நிலையில் குற்ற சம்பவங்களை முற்றிலும் ஒழிப்பதற்காக மாநகர போலீஸ் துறையுடன் ஸ்ரீபுரம் அறக்கட்டளை அமைப்பு கைகோர்த்து உள்ளது . இதை தொடர்ந்து போலீஸ் கமிஷ்னர் சேஷசாய் நிருபர்களிடம் கூறும்போது 1600 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த திட்டமிட்டுள்ளோம் . இதற்காக ஸ்ரீபுரம் அறக்கட்டளை பொதுமக்கள் பங்களிப்புடன் நிதி திரட்டி வருகிறது . முதற்கட்டமாக செரீப் காலனியில் 55 கேமரா பொருத்தப்படும் இதன் கட்டுப்பாடு முழுவதும் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கேமரா இருக்கும் . பராமரிப்பு பணிகளை மட்டும் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மேற்கொள்ளும் . மாநகர பகுதியில் அணைத்து நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் . இதற்காக இதற்காக தனி அரசானை உள்ளது . கண்காணிப்பு கேமரா பொருத்தாத நிறுவனங்களில் உரிமத்தை ரத்து செய்து அவற்றை சீல் வைக்க மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரம் உள்ளது . என்றார் . இந்த நிகழ்ச்சியில் போது சி ஐ ஐ அமைப்பின் தலைவர் ராஜா சண்முகம் , காவல் ஆய்வாளர்கள் முரளி [நுண்ணறிவு பிரிவு ] நெல்சன் [திருப்பூர் தெற்கு ] ஸ்ரீபுரம் அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயகுமார் , ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி , சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம...