Wednesday, August 20, 2014
உடுமலை, : உடுமலையில் விடிய, விடிய கனமழை பெய்தது. பாதாள சாக்கடை திட்டத்துக்காக வீதிகள் தோறும் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
உடுமலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு பெய்ய துவங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பொள்ளாச்சி-தளி ரோடு கார்னரில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தளி ரோடு, தாராபுரம் ரோடு, பழனி ரோடு, கல்பனா ரோடு, வ.உ.சி.வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. மேலும் நகரில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக 33 வார்டுகளிலும் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் அதில் மழைநீர் தேங்கி மீண்டும் குழிகள் தோன்றின. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அதில் சிக்கி தவித்தனர்.
அதேப் போல் தாராபுரம் ரோடு, பாரதியார் நகரில் மழைநீர் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் சைபுதின், நகராட்சி தலைவர் ஷோபனா, பொறியாளர் கண்ணையா, நகர்நல அலுவலர்(பொறுப்பு) இளங்கோ மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ள பணிகளை துரிதப்படுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment