Wednesday, August 20, 2014
உடுமலை, : உடுமலையில் விடிய, விடிய கனமழை பெய்தது. பாதாள சாக்கடை திட்டத்துக்காக வீதிகள் தோறும் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
உடுமலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு பெய்ய துவங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பொள்ளாச்சி-தளி ரோடு கார்னரில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தளி ரோடு, தாராபுரம் ரோடு, பழனி ரோடு, கல்பனா ரோடு, வ.உ.சி.வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. மேலும் நகரில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக 33 வார்டுகளிலும் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் அதில் மழைநீர் தேங்கி மீண்டும் குழிகள் தோன்றின. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அதில் சிக்கி தவித்தனர்.
அதேப் போல் தாராபுரம் ரோடு, பாரதியார் நகரில் மழைநீர் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் சைபுதின், நகராட்சி தலைவர் ஷோபனா, பொறியாளர் கண்ணையா, நகர்நல அலுவலர்(பொறுப்பு) இளங்கோ மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ள பணிகளை துரிதப்படுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
.jpg)
0 comments:
Post a Comment