Wednesday, August 20, 2014
உடுமலை, : உடுமலையில் விடிய, விடிய கனமழை பெய்தது. பாதாள சாக்கடை திட்டத்துக்காக வீதிகள் தோறும் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
உடுமலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு பெய்ய துவங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பொள்ளாச்சி-தளி ரோடு கார்னரில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தளி ரோடு, தாராபுரம் ரோடு, பழனி ரோடு, கல்பனா ரோடு, வ.உ.சி.வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. மேலும் நகரில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக 33 வார்டுகளிலும் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் அதில் மழைநீர் தேங்கி மீண்டும் குழிகள் தோன்றின. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அதில் சிக்கி தவித்தனர்.
அதேப் போல் தாராபுரம் ரோடு, பாரதியார் நகரில் மழைநீர் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் சைபுதின், நகராட்சி தலைவர் ஷோபனா, பொறியாளர் கண்ணையா, நகர்நல அலுவலர்(பொறுப்பு) இளங்கோ மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ள பணிகளை துரிதப்படுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
.jpg)
0 comments:
Post a Comment