Monday, August 25, 2014
உடுமலை, : உடுமலை இந்து மக்கள் கட்சி சார்பில் நிறுவப்படும் விநாயகர் சிலைகளை அமராவதி ஆற்றில் கரைப்பது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா 29ம் தேதி நடக்க இருப்பதை முன்னிட்டு, அதை பாதுகாப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ. குணசேகரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தாசில்தார்கள் சைபுதீன், சண்முகவடிவேல், ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் முத்துராமன் மற்றும் இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா), இந்து சாம்ராஜ்யம், இந்து முன்னணி, ஜாபிசா பள்ளிவாசல், பீர்வீக பள்ளிவாசல் ஆகியவற்றின் நிர்வாகிகள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆர்.டி.ஓ.குணசேகரன் பேசுகையில், விநாயகர் சிலைக்கு எவ்வித ரசாயன கலவையையும் பூசக்கூடாது, சிலை பாதுகாப்புக்கு 15 பேர் கொண்ட கமிட்டி அமைத்து எப்போதும் 5 பேர் பாதுகாப்பில் இருக்க வேண்டும். நிர்ணயித்த பாதையில் தான் விஜயதர்சன ஊர்வலம் நடத்த வேண்டும் என்றார்.
மேலும், கூட்டத்தில் வரும் 31ம் தேதி உடுமலை குட்டைத்திடலில் இருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக மடத்துக்குளம் எடுத்து சென்று அமராவதி ஆற்றில் கரைப்பது என இந்து மக்கள் கட்சி(அனுமன் சேனா), இந்து சாம்ராஜ்யம் ஆகிய கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் கூறுகையில், பிஏபி வாய்க்காலில் தற்போது தண்ணீர் இல்லை. மடத்துக்குளம் கொண்டு சென்று அமராவதியில் கரைப்பது கடினம். எனவே பிஏபி கால்வாயில் தண்ணீர் வந்ததும் உடுமலை, திருப்பூர், கொடுங்கியம் ஆகிய பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகளை அதில் கரைப்பது என்றும், அதுவரை சிலைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் கூறினர். இதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ.குணசேகரன், திருப்பூரில் மாவட்ட கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார். அதில் உங்கள் கோரிக்கையை வைக்கலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம...
0 comments:
Post a Comment