Monday, August 25, 2014
உடுமலை, : உடுமலை இந்து மக்கள் கட்சி சார்பில் நிறுவப்படும் விநாயகர் சிலைகளை அமராவதி ஆற்றில் கரைப்பது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா 29ம் தேதி நடக்க இருப்பதை முன்னிட்டு, அதை பாதுகாப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ. குணசேகரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தாசில்தார்கள் சைபுதீன், சண்முகவடிவேல், ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் முத்துராமன் மற்றும் இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா), இந்து சாம்ராஜ்யம், இந்து முன்னணி, ஜாபிசா பள்ளிவாசல், பீர்வீக பள்ளிவாசல் ஆகியவற்றின் நிர்வாகிகள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆர்.டி.ஓ.குணசேகரன் பேசுகையில், விநாயகர் சிலைக்கு எவ்வித ரசாயன கலவையையும் பூசக்கூடாது, சிலை பாதுகாப்புக்கு 15 பேர் கொண்ட கமிட்டி அமைத்து எப்போதும் 5 பேர் பாதுகாப்பில் இருக்க வேண்டும். நிர்ணயித்த பாதையில் தான் விஜயதர்சன ஊர்வலம் நடத்த வேண்டும் என்றார்.
மேலும், கூட்டத்தில் வரும் 31ம் தேதி உடுமலை குட்டைத்திடலில் இருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக மடத்துக்குளம் எடுத்து சென்று அமராவதி ஆற்றில் கரைப்பது என இந்து மக்கள் கட்சி(அனுமன் சேனா), இந்து சாம்ராஜ்யம் ஆகிய கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் கூறுகையில், பிஏபி வாய்க்காலில் தற்போது தண்ணீர் இல்லை. மடத்துக்குளம் கொண்டு சென்று அமராவதியில் கரைப்பது கடினம். எனவே பிஏபி கால்வாயில் தண்ணீர் வந்ததும் உடுமலை, திருப்பூர், கொடுங்கியம் ஆகிய பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகளை அதில் கரைப்பது என்றும், அதுவரை சிலைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் கூறினர். இதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ.குணசேகரன், திருப்பூரில் மாவட்ட கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார். அதில் உங்கள் கோரிக்கையை வைக்கலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment