Friday, August 29, 2014
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.ரவி ஆகியோர் வெள்ளியன்று விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாற்றத்தின் நாயகனாக தோற்றம் காட்டி மத்தியில் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே மக்களுக்கு எதிரான பாதையில் நடைபோடத் தொடங்கிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வங்கி, காப்பீடு உள்ளிட்ட நிதித்துறை மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் அந்நியர்களுக்குத் தாராளம்,கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மேல் சலுகை என அள்ளிக் கொடுத்தும் நம்பி வாக்களித்த இந்திய மக்களுக்குப் பாதகமான பாதையில் அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறது. அதேசமயம் நெருக்கடியை திசை திருப்பி ஆதாயம் தேட ஆங்காங்கே மதரீதியான துவேஷத்தையும், மதமோதல்களையும் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
அதேபோல் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு ஒரு பக்கம் விலையில்லா பொருட்களை மக்களுக்கு வாரி வழங்கி வருவதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டு, மறுபக்கம் தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களைப் பறிக்கிறது. தொழிலாளர்களின் உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் பறித்து வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மணல் கொள்ளை, லஞ்சம், ஊழல் சீரழிவு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்திருக்கிறது.மக்களுக்கு எதிராக மத்திய அரசின் அதே தாராளமயக் கொள்கைகளை மாநில அரசும் திணித்து வருகிறது.
அனைத்துப் பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க எப்போதும் அர்ப்பணிப்பு உணர்வோடு முன்வரிசையில் நின்று போராடி வரும் இடதுசாரிகள் இன்றைய மத்திய,மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகள், தாக்குதலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இந்த வாரம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழுக்களாக மக்கள் சந்திப்புப் பிரச்சார இயக்கத்தை நடத்தியுள்ளன.
அதன் நிறைவாக செப்டம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு கட்சிகளின் மேல்மட்டத் தலைவர்கள் தொடங்கி நகர, கிராமங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் பிரம்மாண்டமான உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்துகின்றனர்.
அதன்படி திருப்பூரில் செப்டம்பர் 1ம் தேதி திங்களன்று மாநகராட்சி அலுவலகம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தோழர்கள் பங்கேற்கின்றனர். மாவட்டம், மாநகரம், நகரம், பேரூராட்சி, ஒன்றியம்,கிராமப்புறம் என அனைத்து மட்டங்களில் இருந்தும் தலைவர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் இந்த முழுநாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மக்கள் நலன் காக்க நடத்தப்படும் இப்போராட்டத்திற்கு அனைத்துப் பகுதியினரும், ஜனநாயக எண்ணம் படைத்தவர்களும் பேராதரவு கொடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
0 comments:
Post a Comment