Friday, August 22, 2014
On Friday, August 22, 2014 by Anonymous in குற்றப்பிரிவு
புதுடெல்லி
2013–ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட பல மடங்கு அதிகரித்து இருப்பதாக தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.
அதிர்ச்சி தகவல்கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந்தேதி தெற்கு டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைதானபோது அதில் 16 வயது சிறுவன் ஒருவனும் இருந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய அளவில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான பதிவுகளை சேரிக்கும் தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் சிறுவயது குற்றவாளிகள் குறித்து மேலும் பல அதிர்ச்சியான தகவல்களை நேற்று வெளியிட்டது.
அதில் கடந்த 2013–ம் ஆண்டில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களில் சிறுவர்களின் சதவீதம் அதிகரித்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளது.
கற்பழிப்பு குற்றங்களில் சிறுவர்கள்கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட சிறுவர்களின் எண்ணிக்கை சதவீதம் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மீதான வன்செயலில் ஈடுபட்ட சிறுவர்களின் சதவீதம் 132.3 ஆகும். இதேபோல் பெண்களை மானபங்கப்படுத்திய சிறுவர்களின் சதவீதம் 70.5. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்ட சிறுவர்கள் சதவீதம் 60.3.
ஒட்டுமொத்தமாக இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கைதான சிறுவர்களின் சதவீதம் 66.3 ஆகும். இவர்கள் அனைவருமே 16 முதல் 18 வயது கொண்டவர்கள் ஆவர்.
31 ஆயிரம் பேர் மீது கிரிமினல் வழக்குகடந்த ஆண்டு நாடு முழுவதும் குற்றச்செயல்களில் தொடர்பு கொண்டிருந்ததாக 31 ஆயிரத்து 725 சிறுவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இது கடந்த 2012–ம் ஆண்டை விட 13.6 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது 27 ஆயிரத்து 936 கிரிமினல் வழக்குகளே சிறுவர்கள் மீது பதிவாகி இருந்தது.
2013–ல் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக 7,969 சிறுவர்களும், தாக்குதல் நடத்தி காயத்தை ஏற்படுத்தியாக 6,043 சிறுவர்களும், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக 3,784 சிறுவர்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது நாட்டின் ஒட்டுமொத்த குற்றச்செயல்களில் 40.9 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
43 ஆயிரம் பேர் கைதுகடந்த ஆண்டு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக 43 ஆயிரத்து 506 சிறுவர்கள் கைதானார்கள். இவர்களில் 8,392 பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். 13 ஆயிரத்து 984 பேர் ஆரம்பக் கல்வி வரை படித்தவர்கள். இந்த 2 பிரிவுகளிலும் மட்டும் 51.9 சதவீத சிறுவர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது.
மேலும், இவர்களில் 50.2 சதவீத சிறுவர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது குடும்பத்தின் ஆண்டு வருமானமே ரூ.25 ஆயிரம்தான்.
மேலும் பெற்றோருடன் வசித்துக்கொண்டே குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக 35 ஆயிரத்து 244 சிறுவர்கள் கைதாகி உள்ளனர். இது 2013–ல் நாடு முழுவதும் கைதான மொத்த சிறுவர்களின் எண்ணிக்கையில் 81 சதவீதம் ஆகும்.
மேற்கண்டவாறு தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டு உள்ளது.
மேனகா காந்தி வலியுறுத்தல்கற்பழிப்பு, பெண்களை மானபங்கப்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை, சிறுவர்களாக கருதாமல் இளம் குற்றவாளிகளாக கருதி அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று மத்திய மந்திரி மேனகாகாந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
2013–ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட பல மடங்கு அதிகரித்து இருப்பதாக தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.
அதிர்ச்சி தகவல்கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந்தேதி தெற்கு டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைதானபோது அதில் 16 வயது சிறுவன் ஒருவனும் இருந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய அளவில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான பதிவுகளை சேரிக்கும் தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் சிறுவயது குற்றவாளிகள் குறித்து மேலும் பல அதிர்ச்சியான தகவல்களை நேற்று வெளியிட்டது.
அதில் கடந்த 2013–ம் ஆண்டில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களில் சிறுவர்களின் சதவீதம் அதிகரித்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளது.
கற்பழிப்பு குற்றங்களில் சிறுவர்கள்கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட சிறுவர்களின் எண்ணிக்கை சதவீதம் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மீதான வன்செயலில் ஈடுபட்ட சிறுவர்களின் சதவீதம் 132.3 ஆகும். இதேபோல் பெண்களை மானபங்கப்படுத்திய சிறுவர்களின் சதவீதம் 70.5. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்ட சிறுவர்கள் சதவீதம் 60.3.
ஒட்டுமொத்தமாக இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கைதான சிறுவர்களின் சதவீதம் 66.3 ஆகும். இவர்கள் அனைவருமே 16 முதல் 18 வயது கொண்டவர்கள் ஆவர்.
31 ஆயிரம் பேர் மீது கிரிமினல் வழக்குகடந்த ஆண்டு நாடு முழுவதும் குற்றச்செயல்களில் தொடர்பு கொண்டிருந்ததாக 31 ஆயிரத்து 725 சிறுவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இது கடந்த 2012–ம் ஆண்டை விட 13.6 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது 27 ஆயிரத்து 936 கிரிமினல் வழக்குகளே சிறுவர்கள் மீது பதிவாகி இருந்தது.
2013–ல் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக 7,969 சிறுவர்களும், தாக்குதல் நடத்தி காயத்தை ஏற்படுத்தியாக 6,043 சிறுவர்களும், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக 3,784 சிறுவர்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது நாட்டின் ஒட்டுமொத்த குற்றச்செயல்களில் 40.9 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
43 ஆயிரம் பேர் கைதுகடந்த ஆண்டு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக 43 ஆயிரத்து 506 சிறுவர்கள் கைதானார்கள். இவர்களில் 8,392 பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். 13 ஆயிரத்து 984 பேர் ஆரம்பக் கல்வி வரை படித்தவர்கள். இந்த 2 பிரிவுகளிலும் மட்டும் 51.9 சதவீத சிறுவர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது.
மேலும், இவர்களில் 50.2 சதவீத சிறுவர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது குடும்பத்தின் ஆண்டு வருமானமே ரூ.25 ஆயிரம்தான்.
மேலும் பெற்றோருடன் வசித்துக்கொண்டே குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக 35 ஆயிரத்து 244 சிறுவர்கள் கைதாகி உள்ளனர். இது 2013–ல் நாடு முழுவதும் கைதான மொத்த சிறுவர்களின் எண்ணிக்கையில் 81 சதவீதம் ஆகும்.
மேற்கண்டவாறு தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டு உள்ளது.
மேனகா காந்தி வலியுறுத்தல்கற்பழிப்பு, பெண்களை மானபங்கப்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை, சிறுவர்களாக கருதாமல் இளம் குற்றவாளிகளாக கருதி அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று மத்திய மந்திரி மேனகாகாந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
0 comments:
Post a Comment