Friday, August 29, 2014
ஈரோடு எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா பகுதியில் நேற்று காங்கயம் ஈ.பி.ஈ.டி. பொறியியல் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு வீதி நாடகம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு போக்குவரத்து போலீஸ் துணை சூப்பிரண்டு கொடிச்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ–மாணவிகளின் வீதி நாடகம் நடந்தது. குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது, செல்போனில் பேசிக்கொண்டே மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் விபத்துகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து நடித்துக்காட்டினர். விபத்தில் வாலிபர்கள் கால்கள் உடைந்து விழுந்து கிடப்பது, தலையில் படுகாயம் அடைந்து உயிரிழப்பது, உறவினர்கள் கதறி அழுவது போன்ற காட்சிகளை மாணவ–மாணவிகள் தத்ரூபமாக நடித்துக்காட்டினார்கள். இந்த நாடகத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அப்துல்கலாம், மோகன்ராஜ், கல்லூரி டீன் ஏ.ஜி.என்.நாராயணன், பேராசிரியர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் நாடகக்குழுவை திருப்பூர் அரிமா சாலை பாதுகாப்பு திட்ட தலைவர் ராமகிருஷ்ணன் வழிநடத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...

0 comments:
Post a Comment