Friday, August 29, 2014
ஈரோடு எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா பகுதியில் நேற்று காங்கயம் ஈ.பி.ஈ.டி. பொறியியல் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு வீதி நாடகம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு போக்குவரத்து போலீஸ் துணை சூப்பிரண்டு கொடிச்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ–மாணவிகளின் வீதி நாடகம் நடந்தது. குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது, செல்போனில் பேசிக்கொண்டே மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் விபத்துகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து நடித்துக்காட்டினர். விபத்தில் வாலிபர்கள் கால்கள் உடைந்து விழுந்து கிடப்பது, தலையில் படுகாயம் அடைந்து உயிரிழப்பது, உறவினர்கள் கதறி அழுவது போன்ற காட்சிகளை மாணவ–மாணவிகள் தத்ரூபமாக நடித்துக்காட்டினார்கள். இந்த நாடகத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அப்துல்கலாம், மோகன்ராஜ், கல்லூரி டீன் ஏ.ஜி.என்.நாராயணன், பேராசிரியர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் நாடகக்குழுவை திருப்பூர் அரிமா சாலை பாதுகாப்பு திட்ட தலைவர் ராமகிருஷ்ணன் வழிநடத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment