Thursday, August 14, 2014
இந்தியாவின் 68–வது சுதந்திரதின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காலை 9 மணிக்கு தேசியக்கொடி யேற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து சுதந்திரதின உரையாற்றும் அவர் நலத்திட்ட உதவிகள் மற்றும் விருதுகளை வழங்குகிறார். சுதந்திரதின விழாவையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திரதின விழா நாளை (வெள்ளிக் கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. விழாவில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றுகிறார்.
போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் அவர் சுதந்திர போராட்ட தியாகிக ளுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கிறார்.
பின்னர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கங்களை அணிவிக்கிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொள்ளும் கலைநிகழச்சிகள் நடைபெறுகிறது.
சுதந்திரதின விழாவையொட்டி கோவை நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கோவை நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. வாகனங்களில் பயணம் செய்வோரின் விவரங்களை முழுமையாக அறிந்த பின்னரே அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதேபோல் அனைத்து லாட்ஜூகளிலும் சோதனை நடைபெறுகிறது. மர்ம மனிதர்கள் நடமாட்டம் இருந்தால் பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக்கல்லூரி மைதா னத்தில் நாளை காலை 8 மணிக்கு சுதந்திரதினவிழா நடைபெறுகிறது. கலெக் டர் கோவிந்தராஜ் தேசியக் கொடியேற்றி போலீசார் மற்றும் என்.சி.சி., ஊர்க் காவல் படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
அதன் பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுர விக்கும் அவர் ஏழை–எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவி களை வழங்குகிறார். மாவட்டம் முழுவதும் இருந்து கலந்து கொள்ளும் மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறு கிறது. சுதந்திரதின விழாவை யொட்டி திருப்பூர் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் மேயர் விசாலாட்சி கலந்து கொண்டு தேசியக் கொடியேற்று கிறார்.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு சுதந்திரதினவிழா நடைபெறுகிறது. கலெக்டர் சங்கர் தேசியக்கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் நலத்திட்ட உதவி வழங்குகிறார்.
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் சமீப காலமாக நக்சலைட்டுகளின் நடமாட்டம் உள்ளதாக போலீசுக்கு தகவல்கள் வந்தன. அதன்பேரில் தமிழக போலீசாரும், கேரள போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் சுதந்திர தினத்தன்று நீலகிரி–கேரள எல்லையில் உள்ள போலீஸ் நிலையங்களை நக்சலைட்டுகள் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்திருந்தது. அதன் பேரில் அந்த காவல் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி–கேரள–கர்நாடக எல்லைப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...

0 comments:
Post a Comment