Thursday, August 14, 2014
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:–
வெள்ளலூர் குளத்தில் வண்டல் மண், கிராவல் மண் எடுக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு, பகலாக அனுமதிக்கப்பட்ட அளவுக்கு கீழ் 15 அடி வரை தோண்டி கிராவல் மண் கடத்தி வருகிறார்கள்.
குளம் சீரமைப்பு என்ற பெயரில் மண் கடத்தல் நடக்கிறது. இந்த குளத்தில் மண் எடுத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. எனவே மண் எடுக்க தனியாருக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. சூலூர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘‘செம்மாண்டம்பாளையம் குளம், வண்ணத்தாங்கரை ஓடை மூலமாக கிடைக்கும் நீரில் சூலூர் சுற்றுப்பகுதியில் விவசாயம் நடக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர இந்த நீராதாரங்கள் உதவியாக இருக்கிறது.
இந்த குளத்தை விவசாயி கள் தூர் வாரி சீரமைக்க வண்டல் மண்ணை விவசாய பணிக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
கோவை மினி லாரி ஆபரேட்டர் சங்கத்தினர் அளித்துள்ள மனுவில், ‘‘வெள்ளலூரில் லாரிப் பேட்டை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கே மினி லாரிகள் நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment