Sunday, September 21, 2014
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம்
ரூ.1,00,000 கோடி மதிப்பை விரைவில் எட்டுவற்கான வாய்ப்புகள் உள்ளன என்று
இந்திய தொழில் கூட்டமைப்பின்(சி.ஐ.ஐ) தமிழக தலைவர் ரவிசாம்
பேசினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கவுன்சில் சார்பில் பின்னலாடை தொழிலின் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ‘கிளஸ்டர்’ எனப்படும் ஒருங்கிணைந்த தொழில் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 13 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒருங்கிணைந்த தொழில் மையத்தின் தொடக்க விழா ஏஞ்சல் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.சி.ஐ.ஐ. திருப்பூர் மாவட்ட கவுன்சில் துணைத் தலைவர் வேலுச்சாமி வரவேற்றார். ஒருங்கிணைந்த தொழில் மையத்தின் தலைவர் நாராயணன், முதன்மை ஆலோசகர் வைத்தியநாதன், தொழில் அதிபர் பங்கேரா ஆகியோர் தொழில் முனைவோர்களுக்கு நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய தொழில் நுட்ப விவரங்களை விளக்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சி.ஐ.ஐ. தமிழக தலைவர்
ரவிசாம் பேசியது:
திருப்பூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 5 மாதங்கள் தான் ஆகிறது. இந்நிலையில் 13 பின்னலாடை நிறுவனங்கள் ஒன்றிணைந்து
‘கிளஸ்டர்’ அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. நிறுவனத்தில் உண்டாகும் உற்பத்திக் குறைபாடுகள், பிழைகளை களைந்து மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டு அதன் மூலமாக செலவுகளை குறைத்து, உற்பத்தியை பெருக்குவதற்கு இந்த மையம் உதவிகரமாக அமையும்.
திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி மதிப்பு ரூ.18,000 கோடி மதிப்பில் உள்ளது.
இந்த ஏற்றுமதியை ரூ.1,00,000 கோடி மதிப்புக்கு உயர்த்துவதற்காக தொழில்துறையினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு
பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றனர். இந்திய தொழில் வளர்ச்சியிலும், தமிழக தொழில் வளர்ச்சியிலும் திருப்பூரின் பின்னலாடை தொழில் முக்கிய பங்களிப்பு செலுத்து வருகிறது. எனவே, ரூ.1,00, 000 கோடி மதிப்புக்கான வளர்ச்சி நிலை எட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை. சி.ஐ.ஐ.அமைப்பில் இடம் பெற்று 6 மாதங்களுக்குள் திருப்பூரில் கிளஸ்டர் ஏற்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது ஆகும் என்றார்.
இந்த கருத்தரங்கில் ‘கிளஸ்டர்’ அமைப்பில் இணைந்துள்ள நிறுவன பிரதிநிதிகளுக்கு வங்கி கணக்கு பரிமாற்றம், உற்பத்தி பணிகளில் செய்ய வேண்டிய பணிகள், செலவுகளை மிச்சப்படுத்தும் நுணுக்கங்கள், சந்தையில் பொருள்களை விற்பனை செய்யும்போது மேற்கொள்ள வேண்டியவை குறித்த பல்வேறு குறிப்புகள் தெரிவிக்கப்பட்டன.
அமேசிங் எக்ஸ்போர்ட்ஸ் கார்ப்பரேசன், ஆர்ம்ஸ்ட்ராங் நிட்டிங் மில், பி.எஸ் அப்பேரல், கரோனா நிட்வேர், சிபிசி பேஷன்ஸ் ஆசியா பிரைவேட் லிமிடெட், தன்வர்ஷினி எக்ஸ்போர்ட்ஸ், எஸ்டீம் நிட்வேர், கீதாலயா அசோசியேட்ஸ், கந்தன் நிட்ஸ், எம்.எஸ்.கார்த்திகேயன் கார்மெண்ட்ஸ், ராகம் எக்ஸ்போர்ட்ஸ், எஸ்.ஆர்.ஜி அப்பேரல், வார்ஷா இண்டர்நேஷனல் ஆகிய 13 நிறுவனங்கள் இந்த கிளஸ்டர் குழுவில் இணைந்துள்ளன
இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கவுன்சில் சார்பில் பின்னலாடை தொழிலின் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ‘கிளஸ்டர்’ எனப்படும் ஒருங்கிணைந்த தொழில் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 13 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒருங்கிணைந்த தொழில் மையத்தின் தொடக்க விழா ஏஞ்சல் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.சி.ஐ.ஐ. திருப்பூர் மாவட்ட கவுன்சில் துணைத் தலைவர் வேலுச்சாமி வரவேற்றார். ஒருங்கிணைந்த தொழில் மையத்தின் தலைவர் நாராயணன், முதன்மை ஆலோசகர் வைத்தியநாதன், தொழில் அதிபர் பங்கேரா ஆகியோர் தொழில் முனைவோர்களுக்கு நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய தொழில் நுட்ப விவரங்களை விளக்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சி.ஐ.ஐ. தமிழக தலைவர்
ரவிசாம் பேசியது:
திருப்பூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 5 மாதங்கள் தான் ஆகிறது. இந்நிலையில் 13 பின்னலாடை நிறுவனங்கள் ஒன்றிணைந்து
‘கிளஸ்டர்’ அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. நிறுவனத்தில் உண்டாகும் உற்பத்திக் குறைபாடுகள், பிழைகளை களைந்து மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டு அதன் மூலமாக செலவுகளை குறைத்து, உற்பத்தியை பெருக்குவதற்கு இந்த மையம் உதவிகரமாக அமையும்.
திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி மதிப்பு ரூ.18,000 கோடி மதிப்பில் உள்ளது.
இந்த ஏற்றுமதியை ரூ.1,00,000 கோடி மதிப்புக்கு உயர்த்துவதற்காக தொழில்துறையினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு
பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றனர். இந்திய தொழில் வளர்ச்சியிலும், தமிழக தொழில் வளர்ச்சியிலும் திருப்பூரின் பின்னலாடை தொழில் முக்கிய பங்களிப்பு செலுத்து வருகிறது. எனவே, ரூ.1,00, 000 கோடி மதிப்புக்கான வளர்ச்சி நிலை எட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை. சி.ஐ.ஐ.அமைப்பில் இடம் பெற்று 6 மாதங்களுக்குள் திருப்பூரில் கிளஸ்டர் ஏற்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது ஆகும் என்றார்.
இந்த கருத்தரங்கில் ‘கிளஸ்டர்’ அமைப்பில் இணைந்துள்ள நிறுவன பிரதிநிதிகளுக்கு வங்கி கணக்கு பரிமாற்றம், உற்பத்தி பணிகளில் செய்ய வேண்டிய பணிகள், செலவுகளை மிச்சப்படுத்தும் நுணுக்கங்கள், சந்தையில் பொருள்களை விற்பனை செய்யும்போது மேற்கொள்ள வேண்டியவை குறித்த பல்வேறு குறிப்புகள் தெரிவிக்கப்பட்டன.
அமேசிங் எக்ஸ்போர்ட்ஸ் கார்ப்பரேசன், ஆர்ம்ஸ்ட்ராங் நிட்டிங் மில், பி.எஸ் அப்பேரல், கரோனா நிட்வேர், சிபிசி பேஷன்ஸ் ஆசியா பிரைவேட் லிமிடெட், தன்வர்ஷினி எக்ஸ்போர்ட்ஸ், எஸ்டீம் நிட்வேர், கீதாலயா அசோசியேட்ஸ், கந்தன் நிட்ஸ், எம்.எஸ்.கார்த்திகேயன் கார்மெண்ட்ஸ், ராகம் எக்ஸ்போர்ட்ஸ், எஸ்.ஆர்.ஜி அப்பேரல், வார்ஷா இண்டர்நேஷனல் ஆகிய 13 நிறுவனங்கள் இந்த கிளஸ்டர் குழுவில் இணைந்துள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...



0 comments:
Post a Comment